களின் தெறித்து- கைவிரல்களால் தெறித்து ஓசையுண்டாக்கி, வடிகணை முனைஉற அடைசி - கூரிய அம்புகளைப் போர்க்குப் பொருந்துமாறு வில்முனையில்வைத்து, செல் எடுத்த பேர் இடி என - மேகங்கொள்ளுகிற பெரிய இடியைப்போல, முறை முறை தொடுத்தனர் - ஒருவர்மேல் ஒருவர் பிரயோகித்தார்கள்; (எ - று.) நிலை- போரில்வில்வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை. சாபத்தாற் பெண்வடிவமான ருக்ஷரஜஸ்என்கிற வானரராசனது வாலின் அழகைக் கண்டு காதல்கொண்ட இந்திரனுக்கு அப்பெண் குரங்கினிடம் பிறந்தவன் வாலி யென்றும், அவ்வாறே அதன்கழுத்தினழகைக்கண்டு காமுற்ற சூரியனுக்கு அதனிடத்தில் தோன்றியவன் சுக்கிரீவனென்றும் உணர்க. வாலீ- வாலில்வலிமையுடையவனென்று காரணப்பொருள்படும்; வாலிசுக்கிரீவர் தம்முள்மாறு கொண்டு பொருதமை, இராமாயணத்திற்பிரசித்தம். சுக்கிரீவன் என்ற பெயர் - அழகியகழுத்துடையவனென்று பொருள்படும்; அப்பெயரின் பொருளை 'மணிக்கழுத்துடையவன்' என்றார் செல் - (விரைந்து) செல்லுதல்பற்றி மேகத்துக்கு வந்த காரணப்பெயர். ஈற்றடி - உவமையணி. (25) 26.-இருவரும் சிறிதுபொழுதுசமமாகப் பொருதல். எய்தவம்புக ளிருவர்மெய்யினும்படாதிடையிடை யெஃகுடைத் தலைகள், கொய்தவம்புகளாகியே முழுவதும் விழுந்தனகூறுவதென்கொல், கைதவம்புகலுதற் கிலாவெண்ணுடைக் கருத்தினர் திருத்தகுவரத்தாற், செய்தவம் புரையறப்பலித்தனையவர்திருக்கணுங்கைகளுஞ் சிவந்தார். |
(இ -ள்.) எய்த அம்புகள் - (இரண்டுபேரும்) செலுத்திய பாணங்கள், இருவர் மெய்யினும் படாது - இரண்டுபேருடைய உடம்பிலும் படாமல், இடை இடை - நடுவிலே நடுவிலே, எஃகு உடை தலைகள்கொய்த அம்புகள் ஆகி - கூர்மையுடைய நுனி துணி்பட்ட பாணங்களாகி, முழுவதும் விழுந்தன - எங்குங் கீழ்விழுந்திட்டன; கூறுவது என் கொல் - (அவர்கள்) போர்த்திறத்தைப்பற்றிச் சொல்லவேண்டுவதென்ன? கை தவம்புகலுதற்கு இலா எண் உடை கருத்தினர் - வஞ்சனையுள்ளதென்று சொல்லுதற்குச் சிறிதும் இடமில்லாத நல்லெண்ணமுடைய மனத்தையுடையவர்களும், திரு தகு வரத்தால் - மேன்மைபொருந்திய வரங்களைப் பெறும்படி, செய் - செய்த, தவம் - தபசு, புரை அற - பழுது படாமல், பலித்து அனையவர் - பயன்பட்டாற் போன்றவர்களுமான அவ்விருவரும், திரு கணும் கைகளும் சிவந்தார் - (யுத்தாவேசத்தால்) அழகிய (தங்கள்) கண்களும் கைகளும் செந்நிறமடையப் பெற்றார்கள்; (எ - று.) வஞ்சகமானஎண்ணம் சிறிதும் இல்லாதவர்களும், நற்றவப்பயன் சித்தி பெற்றார்போலத் திறன்பெற்றவர்களுமான தருமனும் சல்லியனும் மிக்ககோபத்தாற் கண்சிவந்து இடைவிடாது விற்பிடித்து அம்புதொடுத்தலாற் கைசிவந்து பொருகையில் இருவரும் ஒருவர்மேலொருவர் எய்த அம்புகளெல்லாம் அவர்கள்மீது படாமல் தம்மில் ஒன்றோடொன்று தாக்கி அழிந்து இடையிற் கீழ்விழுந்திட் |