பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்29

டன; இப்படிகுறிதவறாமல் எதிரெதிரே அம்புதொடுத்துப் பொருதவியப்புக்
கூறுதற்கு அரிது என்பதாம்.

     கண்களும்கைகளும் சிவந்தார் - உயர்திணைதொடர்ந்த அஃறிணைச்
சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடிபையே கொண்ட திணைவழுவமைதி.(26)

27.-சல்லியன் தருமனது பாகனையும்வில்லையும்
குடையையும் அழித்தல்.

கிரித்தடங் குவடனைய கேசரிநிகர்சல்லியன் முரசகேதனன்றன்,
பரித்தடந்தனித்தேர் விடும் பாகனைப் பாணமொன்றாற்
                                       றலைதுணித்து,
வரித்தடஞ்சிலை நாணறுத் தொருமுனைவாளியால்வடிக்கணை
                                         யொன்றால்,
விரித்த வெண்குடை மகுடமுமொடித்தனன்வில்வலோ ரெவரினு
                                          மிக்கோன்.

     (இ -ள்.) (பின்பு),-வில் வலோர் எவரினும் மிக்கோன் - விற்போரில்
வல்லவர்யாவரினுஞ் சிறந்தவனாகிய, தட கிரி குவடு அனைய கேசரி நிகர்
சல்லியன் - பெரியமலைச்சிகரத்தையொத்தவனும் ஆண்
சிங்கம்போன்றவனுமான சல்லியன்,- முரசகேதனன்தன் - முரசவாத்தியத்தின்
வடிவமெழுதிய கொடியையுடைய தருமனது, பரி தட தனிதேர் விடும்
பாகனை- குதிரைகள் பூண்ட பெரிய ஒப்பற்ற தேரைச் செலுத்துஞ்
சாரதியை, பாணம்ஒன்றால் தலைதுணித்து - ஓரம்பினால் தலையை யறுத்து,-
வரி தட சிலைநாண் - கட்டமைந்த பெரிய வில்லின் நாணினை, ஒரு முனை
வாளியால் - கூர்நுனியையுடைய அம்பொன்றினால், அறுத்து-, வடி கணை
ஒன்றால் - கூரியஅம்பொன்றினால், விரித்த வெள்குடைமகுடமும்
ஒடித்தனன் -பரந்தவெண்குடையின் கலசத்தையுந்துணித்திட்டான்; (எ - று.)

     'கிரித்தடங்குவடனைய''கேசரிநிகர்' என்ற இரண்டும் - சல்லியனுக்கு
அடைமொழி.  சலிப்பில்லாத உறுதிக்கும் வலிமைக்கும் மலையையும், பல
பராக்கிரமங்களுக்கு ஆண்சிங்கத்தையும் உவமைகூறினார்.  கேஸரம் - பிடரி
மயிர்; அதனையுடையது கேஸரீ யெனக் காரணக்குறி.            (27)

28.-அதுகண்டு வீமன் வந்து சல்லியனுக்குமாறுசெய்தல்.

வலவன் வீழ்ந்ததுந் தனுவினா ணற்றதுமனத்தழுக்கிலாவாய்மைப்,
புலவன் வெண்குடை யொடிந்தது மேல்வரு போற்றலனேற்றமும்
                                           பொறாமற்,
குலவுதிண்சிலைக் குரிசிலைத்தம்முனைக்கொண்டவீரிய
                                   மெலாங்கொண்டான்,
கலவமாமயி லொழித்துப்பஞ்சானனமெழுதிய தனிக்கொடிக்கந்தன்.

     (இ -ள்.) மனத்து அழுக்கு இலா - மனத்திலே களங்கமில்லாத, வாய்மை
- சத்தியத்தையுடைய, புலவன் - தேர்ந்த அறிவுடையவனானதருமபுத்திரனது,
வலவன் - தேர்ப்பாகன், வீழ்ந்ததும் - (சல்லியனம்புகளால்) தலையற்று
விழுந்ததையும், தனுவின் நாண் - வில்லின் நாணி, அற்றதும் -
அறுபட்டதையும், வெள் குடை - ஒற்றை வெண்கொற்றக்குடை, ஒடிந்ததும் -
ஒடிபட்டதையும், மேல் வரு -