பக்கம் எண் :

36பாரதம்சல்லிய பருவம்

    புஜங்கம் - மார்பினாற் செல்வதென்றும், வளைந்து செல்வதென்றுங்
காரணப்பொருள் கொள்ளலாம்.  நஞ்சு - நச்சு எனவன்றொடராயிற்று.  சிறகர்
- சிறகு என்னுங் குற்றியலுகரத்துக்கு, அர் - போலி.  புங்கம்-அம்பின்
அடியுமாம்.                                                 (36)

37.-சல்லியன் மீண்டும்தருமன்மேற் போர்தொடங்கல்.

இருபெருஞ் சேனை யோரு மிப்படிச்செருச்செய் காலைத்
தருமன் மாமதலைதன்மேற்சல்லியன்றானுமீளப்
பொருபரித் தடந்தேருந்திப்புகைகெழு முனைகொள்வாளி
ஒருதொடைதன்னிலோரேழுரத்துடன்றுரத்தினானே.

     (இ -ள்.) இரு பெரு சேனையோரும் - பெரிய இரண்டு
சேனையிலுள்ளவீரர்களும், இ படி செரு செய் காலை - இப்படி போர்செய்த
பொழுது,-சல்லியன் தானும் - சல்லியனும்,- மீள - மறுபடியும், பொரு பரி
தட தேர்உந்தி - போருக்குஉரிய குதிரைகள் பூட்டிய பெரிய தனது தேரைச்
செலுத்தி, -புகை கெழு முனை கொள் வாளி ஓர் ஏழ் - உக்கிரத்தாற்
புகையெழும்பும்நுனியைக்கொண்ட ஏழு பாணங்களை, ஒருதொடை தன்னில்-
ஒரேபிரயோகத்தில், தருமன் மா மதலைதன்மேல் - சிறந்த தருமபுத்திரன்
மீது,உரத்துடன் துரத்தினான் - வலிமையோடு செலுத்தினான்; (எ - று.)
ஒருதொடை தன்னில் - தொடுக்குந்தர மொன்றில்; ஒரே தொடர்ச்சியாய்
என்றபடி.                                               (37)

38.-சல்லியன், சுமித்திரன்முதலியோரைக் கொல்லுதல்.

பின்னரும் விரைவினோடும்பெய்கணை மாரிசிந்தி
முன்னரு முனையினின்றோர்முதுகிட முரண்டுசீறித்
துன்னருந்தடந் தேராண்மைச்சுமித்திரன் முதலாவுள்ள
மன்னரை யிமைத்த கண்கண்மலருமுன் மடிவித்தானே.

     (இ -ள்.) பின்னரும் - பின்பும், (சல்லியன்), விரைவினோடும் -
வேகத்துடனே, பெய் கணை மாரி சிந்தி - மிகுதியாக எய்கிற அம்புகளை
மழைபோலச் சொரிந்து,- முன் அரு முனையில் நின்றோர் முதுகு இட -
நினைத்தற்கும் அருமையான போர் முனையில் தன்னையெதிர்த்து நின்ற
வீரர்கள் புறங்கொடுத்தோடும்படி, முரண்டுசீறி - (அவர்கள் மேல்)
மாறுபாடுகொண்டு கோபித்து, துன் அரு - (எவரும்) கிட்டுதற்கும்
அருமையான, தடதேர் - பெரிய தேரையும், ஆண்மை -
பராக்கிரமத்தையுமுடைய, சுமித்திரன் முதல் ஆ உள்ள மன்னரை -
சுமித்திரன்முதலாகவுள்ள அரசர்களை, இமைத்த கண்கள் மலரும் முன்
மடிவித்தான் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே அழித்திட்டான்; (எ - று.)

    இமைத்தகண்கள் மலருமுன் - இயல்பில் ஒருகால் மூடினகண்களைத்
திறப்பதற்குமுன்: இது, விரைவுவிளக்கும்.  முரண்டு என்ற
இறந்தகாலவினையெச்சத்தில், முரண் - பகுதி.                   (38)