பக்கம் எண் :

40பாரதம்சல்லிய பருவம்

    ஸமீரணன் - நன்றாகச்சஞ்சரிப்பவனென்று காரணப்பொருள்படும். பாகு
- யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்; இது - இலக்கணையாய்,
அத்தொழிலுடைய பாகனைக் குறித்தது.                          (43)

44.-சல்லியனதுதேர்க்காவலாளரையும் சேனையையும் வீமன்
அழித்தல்.

உற்றிரு புறத்துந் திண்டேர்க் குரனுற வுதவியாய
கொற்றவர் பலரும் வீழக் கொடிகுடை கவரி வீழச்
சுற்றியநேமிவாசிதுளைக்கரக் கோட்டுநால்வாய்ப்
பொற்றைகடுணிந்துவீழப்புங்கவாளிகளுந்தொட்டான்.

     (இ -ள்.) இரு புறத்தும் உற்று - (சல்லியனது) இரண்டு பக்கங்களிலும்
பொருந்தி, திண்தேர்க்கு - (அவனுடைய) வலியதேருக்கு, உரன் உற -
உறுதிபொருந்த, உதவி ஆய - துணையாகவுள்ள, கொற்றவர் பலரும் -
முன்புவெற்றியையுடைய பல அரசர்களும், வீழ-இறந்து
கீழ்விழும்படியாகவும்,-கொடி- (அவனுடைய) துவசமும், குடை - குடையும்,
கவரி - சாமரமும், வீழ -துணிபட்டுக் கீழ் விழும்படியாகவும், சுற்றிய -
(அவனைச்) சூழ்ந்துள்ள, நேமி -தேர்களும், வாசி - குதிரைகளும், துளை
கரம் - உள்துளையுள்ளதுதிக்கையையும், கோடு - தந்தங்களையும், நால்
வாய் - வெளியேதொங்குகிறவாயையுமுடைய, பொற்றைகள் -
மலைகள்போன்ற யானைகளும், துணிந்துவீழ- துண்டுபட்டுக்
கீழ்விழும்படியாகவும், புங்கம் வாளிகளும் தொட்டான் -(மற்றும்) சிறந்த
அம்புகளைப் பிரயோகித்தான், (வீமன்); (எ - று.)

     நேமிஎன்னுஞ் சக்கரத்தின் பெயர் - சினையாகுபெயராய்த்தேரைக்
குறித்தது.  நால்வாய்-வினைத்தொகை.  பொற்றை என்ற மலையின் பெயர்,
யானைக்கு உவமவாகுபெயராம்.                              (44)

45.-அனைவரும் போர்செய்தல்.

துருபதன் முதலா வுள்ளோர் சோமகர் முதலாவுள்ளோர்
நிருபர்தங்குலத்துளேனைநிருபர்களாகியுள்ளோர்
தருமன்மாமதலையோடுந்தம்பியரோடுங்கூடி
ஒருமுகமாகிமேற்சென்றுறுசெருப்புரியும்வேளை.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ -ள்.) துருபதன் முதல் ஆ உள்ளோர் - துருபதராஜன்
முதலாகவுள்ள அரசர்களும், சோமகர் முதல் ஆ உள்ளோர் - (அவன்
பிறந்த)சோமககுலத்தார் முதலாகவுள்ள அரசர்களும், ஏனை நிருபர் தம்
குலத்துள் -மற்றும் பல அரசர்கள் குலங்களில்தோன்றிய, நிருபர்கள்
ஆகியுள்ளோர் -அரசர்களும், தருமன் மா மதலையோடும் - சிறந்த
தருமபுத்திரனுடனும்,தம்பியரோடும் - (வீமன்முதலிய) தம்பிமார்களுடனும்,
கூடி - சேர்ந்து, ஒருமுகம் ஆகி - ஒரேமுகமாய், மேல் சென்று -
பகைவர்மே லெதிர்த்துப் போய்,உறு செரு புரியும் வேளை -