பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்55

    'வேளின்' இன் - ஒப்புப்பொருளது.  பகை - பகைவர்க்குப்
பண்பாகுபெயர்.                                          (66)

67.-இருதிறத்துச்சேனையும்பொருதல்.

ஆடன்மாவுமலையொப்பனமதக்கரியுமாழிசேர்பவன மொத்த
                                    விரதத்திரளும்,
நாடுபோரிலரியொத்தவனிகத்திரளு நாலுபாலுமெழலுற்ற
                                  மருடற்றினர்கள்,
ஓடியோடியெதிருற்றவர் முடித்தலைகளூறிசோரியுததிக்கிடை
                                   விழுத்தினர்கள்,
கோடி கோடிதமரப்பறைமுழக்கினொடுகோடுகோடுகள்குறித்த
                                  விரு பக்கமுமே.

     (இ -ள்.) ஆடல் மாவும் - போர்வெற்றிக்கு உரிய குதிரைகளும், மலை
ஒப்பன் - மலைபோல்வனவான, மதம் கரியும் - மதயானைகளும், ஆழி சேர்
பவனம் ஒத்த இரதம் திரளும் - சக்கரங்கள் பொருந்திய காற்றுப் போன்ற
தேர்களின் கூட்டங்களும், நாடு போரில் அரி ஒத்த - (பகைவரைத்) தேடிச்
சென்று செய்யும் போரிற் சிங்கங்களைப் போன்ற, அனிகம்திரளும் - காலாட்
சேனைக்கூட்டமும், (ஆகிய நால்வகைப்படைகளிலு முள்ளவர்கள்), நாலு
பாலும் எழல் உற்று - நான்குபக்கங்களிலும்எழுந்து, அமர்உடற்றினர்கள் -
போர்செய்தார்கள்; (செய்து), ஓடி ஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் -
மிகுதியாய் ஓடி வந்து எதிர்த்த வீரர்களது கிரீடமணிந்த தலைகளை, ஊறு
சோரி உததிக்கு இடை விழுத்தினர்கள் - பெருகுகிற இரத்தக்கடலுக்கு
இடையிலே துணித்துத் தள்ளினார்கள்; (அப்பொழுது), கோடி கோடி -
மிகப்பலகோடிக்கணக்கான, தமரம் பறை - ஆரவாரத்தையுடைய
போர்ப்பறைகளின், முழக்கினொடு - பேரொலியுடனே, கோடு கோடுகள் -
வளைந்த சங்குகள், இரு பக்கமும் குறித்த - இரண்டு பக்கங்களிலும்
ஊதப்பட்டன; (எ - று.)

    தேர்ச்சக்கரங்களோடு விரைந்துசெல்லுதலால், அதற்கு, சக்கரங்கள்
பொருந்தியதொரு காற்றை இல்பொருளுவமையாகக் கூறினார்.  பவனம்
என்பதற்கு - பூமி எனக்கொண்டு, தட்டின்பரப்பாற் பூமியையொத்த
இரதத்திரள்என்றாருமுளர்.  இனி, 'ஆழிசேர்' என்றதை இரதத்துக்கு
அடைமொழியாக்கலும் ஒன்று, உததி - நீர்தங்குமிடமெனக் காரணப்
பொருள்படும்;  உதம் = உதகம்: ஜலம்.  கோடிகோடி - மிகப்பல என்ற
மாத்திரமாய் நிற்கும்.  கோடுகோடு - வினைத்தொகை: கோடுதல் -
வளைதல். அலையொப்பன எனப் பிரித்து, அலைபோல்வன என்று
உரைத்துக் குதிரைக்குஅடைமொழியாக்கினும் அமையும்.      (67)

68.-அப்போரின் சிறப்பு.

ஆனபோதிருதளத்தினுமிகுந்தவிறலாண்மைவீரரொருவர்க்
                              கொருவர்மெய்க்கவச,
மானமேயெனநினைத்துவரிபொற்சிலையும்வாளும்
                      வேலுமுதலெத்திறவிதப்படையும்,
மேனியூடுருவவெட்டியநிலைக்கு வமைவேறு
                      கூறவிலதெப்படிமலைத்தனர்கள்,
தானவானவர்கள்யுத்தமுமரக்கரொடு சாகைமாமிருகயுத்தமு
                                   நிகர்த்தனவே.