களைப்பிரயோகித்தற்கு உரிய வில்லின்திறத்தில் சிறந்து விளங்குகிற, புலன்கள்போல்வார்ஐவர் இவர் - ஐம்புலன்கள்போல் அடக்கவொண்ணாதவர்களானஇவ்வைந்துபேரும், யாவரையும் அடர்ப்பான் வந்தோர்-எல்லோரையும்(போரில்) அழிக்க வந்து, சத்திரம் யாவையும் ஏவி- ஆயுதங்களையெல்லாம்செலுத்தி, சங்கம்ஊதி - சங்கத்தை முழக்கி, நெடு பொழுது சமர் விளைத்தார் -வெகுநேரம் போர்செய்து, (பின்பு), சமீரணன்தன் புத்திரனால் -வாயுகுமாரனான வீமனால், முன் சென்ற எழுவரோடும் பொன் உலகம் குடிபுகுந்தார்-முன்னேசென்ற ஏழு உடன்பிறந்தாருடனே தாங்களும் பொன்மயமானவீரசுவர்க்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள் [இறந்தன ரென்றபடி]; (எ - று.) அத்திரம்-அம்பு முதலிய கைவிடுபடை, சஸ்திரம்-வாள் முதலிய கைவிடாப்படை யென்ப; இனி, மந்திரத்தோடு ஏவுவது - அத்திரம்; அஃது இன்றிச் செலுத்துவது சத்திர மென்றும் கூறுப. புலனைந்தும் பிராணிகளுக்கு இன்றியமையாத உறுப்பாயிருத்தல்போலத் துரியோதனனுக்குத் தம்பியரைவர் இன்றியமையாச் சிறப்பின ரென்பார். 'புலன்கள்போல்வார்' என உவமை கூறினார். (80) 81.-அதுகண்டு சீறித்துரியோதனன் போர் தொடங்கல். ஏற்றிடைவெங்கனனுழைந்ததென்னமுன்ன மெழுவருடன்றனக் கிளையோரைவர்சேரக், கூற்றிடையேகுதலுமிகக்கொதித்துநாகக்கொடிவேந்தன்முடி வேந்தர்பலருஞ்சூழ, நாற்றிசையுமெழுந்துபெருங்கடலைமோதி நடுவடவைக்கனலவித்து நடவாநின்ற, காற்றெனவே பாண்டவர்தம் முடலந்தோறுங்கணைமுழுக வல்விசயங்காட்டினானே. |
(இ -ள்.) ஏற்றிடை - ஆயுதம்பாய்ந்த புண்ணிலே, வெம் கனல் - கொடிய நெருப்பு, நுழைந்தது என்ன - நுழைந்ததுபோல, முன்னம் எழுவருடன்- முன் (இறந்த) ஏழுதம்பிமாருடனே, தனக்குஇளையோர் ஐவர்- தனக்குத்தம்பியரான வேறுஐவரும், சேர-ஒருசேர, கூற்றிடை ஏகுதலும் - யமனிடத்திற்குச் சென்றவுடனே [இறந்தவுடனே], மிக கொதித்து- மிகவுஞ்சீற்றங்கொண்டு, நாகம் கொடிவேந்தன் - பாம்புக்கொடியையுடைய துரியோதனராசன், முடிவேந்தர் பலரும் சூழ - கிரீடாதிபதிகளான அரசர்கள்பலரும் (தன்னைச்) சூழ்ந்துவர, நால்திசையும் எழுந்து பெரு கடலை மோதி நடுவடவை கனல் அவித்து நடவாநின்ற காற்று எனவே - நான்குத்திக்குக்களிலும் (ஏககாலத்திற்) கிளம்பிப் பெரியகடலைத் தாக்கி அதன்நடுவிலுள்ள படபாமுகாக்னியைத் தணித்துநடப்பதொருகடுங்காற்றுப் போல[மிகவும்உக்கிரமாக], பாண்டவர்தம் உடலம் தோறும் கணை முழுகவில் விசயம் காட்டினான் - பாண்டவர்களுடைய உடம்புகளிலெல்லாம் அம்புகள் பாய்ந்து அழுந்தும்படி (தனது) விற்போர்த்திறத்தைக் காட்டினான்; சிறப்பாக அம்புகளைச் சொரிந்தன னென்பதாம். 'மருமத்தினெறிவேல்பாய்ந்த புண்ணி லாம் பெரும்புழையிற் கனல் நுழைந்தாலென," என்றதனோடு 'ஏற்றிடைவெங்கனல் நுழைந்ததென' என்பதைஒப்பிடுக: இது, வருத்தத்தின்மேல் வருத்தம் விளைதற்கு உவமை. ஏறு என்பது- ஆயுதம்பாய்ந்த புண்ணாதலை 'வாளேறு', |