பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்67

'வேலேறு'என்பவற்றிலுங் காண்க: அதன்மேல் இடை - ஏழனுருபு.  ஓர் -
அசை.  'தம்பியரோரைவர்' என்றும்பாடமுண்டு.  கடலினிடையிலே யுள்ள
தொரு பெண்குதிரையின் முகத்தில் எப்பொழுதும் தீ மூண்டுஎரிகிற தென்றும்,
அது மழை நீர்முதலியவற்றால் கடல்நீர் மிகாதபடி அதனை உறிஞ்சிநிற்ப
தென்றும் நூற்கொள்கை. 

82.-சகதேவன்துரியோதனனையும், இவன்பக்கத்தார்
அவன்பக்கத்தாரையும் வெல்லுதல்.

தன்கரத்தில் விற்றுணிய வேறோர் வில்லாற் சாதேவன்வலம்
                              புரிப்பூந்தாமவேந்தன்,
வன்கரத்து மார்பகத்து முகத்துஞ்சேரவைவாளிகுளிப்பித்தான்
                                       மற்றுமற்று,
முன்களத்து ளெதிர்ந்துள்ளோரிருசேனைக்கு
             முன்னெண்ணுந்திறலுடையோர் மூண்டுமூண்டு,
பின்களத்தைச்சோரியினாற் பரவையாக்கிப் பிறங்கலுமாக்கினர்
                               மடிந்தபிணங்களாலே.

     (இ -ள்.) தன் கரத்தில் வில் - தன் கையிலுள்ள வில், துணிய -
(துரியோதனனெய்த அம்பினால்) துணிபட, வேறு ஓர் வில்லால் - வேறொரு
வில்லைக்கொண்டு, சாதேவன் - சகதேவன், வலம்புரி பூ தாமம் வேந்தன் -
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனராசனது, வல் கரத்தும் -
வலியகைகளிலும், மார்பு அகத்தும் - மார்பிலும், முகத்தும் - முகத்திலும்,
சேர -ஒருசேர, வை வாளி - கூரிய அம்புகளை, குளிப்பித்தான் -
முழுகச்செய்தான்;மற்றும் மற்றும் - மேலும்மேலும், களத்துள்
முன்எதிர்ந்துள்ளோர் -போர்க்களத்தில் முற்பட்டு எதிர்த்துள்ளவர்களான,
இரு சேனைக்கும் முன்எண்ணும் திறல் உடையோர் - இரண்டுசேனைகளிலும்
முதன்மையாய்எண்ணத்தக்க வல்லமையுடைய பாண்டவசேனையார், மூண்டு
மூண்டு -மிகஉக்கிரங்கொண்டு, பின் களத்தை - பின்னிடும்படியான
கௌரவசேனையுள்ள இடத்தை, சோரியினால் பரவை ஆக்கி -
இரத்தப்பெருக்காற்கடலாகச்செய்து, மடிந்த பிணங்களால் பிறங்கலும்
ஆக்கினர் - இறந்தஉடம்புகளால் மலைகளையும் உண்டாக்கினார்கள்;

    பிறங்கலாக்கினர் - மலைபோலக் குவித்தன ரென்பதாம், முன்களம் -
சகதேவன் சேனை, பின்களம் - துரியோதனன் சேனை.           (82)

83.-பிறர் பின்னிட,துரியோதனன்தம்பியர் வீமனை
யெதிர்த்தல்.

காந்துகனலுமிழ் சினவேற்கைக்காந்தாரர் காவலனாஞ்
                           சகுனியுந்தன்கனிட்டனான,
வேந்தனுமன்னவனுடன் பல்வேந்தரோடும் வெம்பனைக்கைப்
                            பலகோடி வேழத்தோடும்,
ஏந்துதடம்புயச்சிகரி வீமன் றன்னோ டிகன்மலைந்து தொலைந்
                           திரிந்தாரிவரை யல்லால்,
ஊர்ந்த மணிப்பணிக்கொடியோனிளைஞர்மீள
                வொன்பதின்மரவனுடன் வந்துடற்றினாரே.

     (இ -ள்.) காந்து - மூண்டெரிகிற, கனல் - நெருப்பை, உமிழ் -
வெளிப்படுத்துகிற, சினம் - உக்கிரத்தன்மையையுடைய, வேல்-வலையேந்திய,
கை - கையையுடைய, காந்தாரர் காவலன் ஆம் சகுனி