86.-அதனாற் சோகித்ததுரியோதனனுக்குச் சகுனி தைரியங்கூறல். தனக்கிளையோர்தொண்ணூற்றொன்பதின்மர்தாமுஞ் சயவீமன் சரத்தாலுந் தண்டினாலுங், கனக்குடிலிற் குடியேறக்கண்டுகண்டு கைசோரமெய்சோரக் கண்ணீர்சோர, எனக்குறுதியுரைத்தவர் தம்முரைகேளாமலென்செய்தேனெனப் பொருளுமிழந்தேனென்று, மனக்கவலையுறுமன்னன் றன்னை நோக்கி மாமனுமற்றொரு கோடிமாற்றஞ்சொன்னான். |
(இ -ள்.) தனக்கு இளையோர் தொண்ணூற்றொன்பதின்மர் தாமும் - தனது தம்பிகள் தொண்ணூற்றொன்பது பேரும், சயவீமன் - வெற்றியையுடையவீமனது, சரத்தாலும் - அம்புகளாலும், தண்டினாலும் - கதையினாலும், கனம் குடிலில் குடி ஏற - மேகங்களுக்குமேலுள்ளதான வீரசுவர்க்கத்திற்சென்றுசேர, கண்டு கண்டு - பார்த்துப் பார்த்து, (அதனால்) கைசோர - கைகள் சோர்வடையவும், மெய் சோர - உடம்பு சோர்வடையவும், கண் நீர் சோர - கண்ணீர்வழியவும், 'எனக்கு உறுதி உரைத்தவர்தம் உரை கேளாமல் - எனக்கு நன்மொழி கூறினவர்களது வார்த்தையைக்கேட்டு அதன்படி நடவாமல், என் செய்தேன் - என்ன காரியஞ்செய்தேன்? எ பொருளும் இழந்தேன் - எல்லாப்பொருள்களையும் இழந்துவிட்டேனே,' என்று- என்று கழிவிரக்கங்கொண்டு, மனம் கவலை உறும் - மனத்திற் கவலையடைந்த, மன்னன் தன்னை நோக்கி - துரியோதனராசனைப் பார்த்து, மாமனும் - மாமனான சகுனியும், மற்று-பின்பு, ஒருகோடி மாற்றம் சொன்னான் - ஒருகோடி வார்த்தைகளை (த்தேறுதலாக)க் கூறுபவனானான்; (எ - று.)- அவற்றில் இரண்டொன்றை அடுத்த கவிகளிற் காட்டுகிறார். மேலுலகிலுள்ள தங்குமிட மென்ற பொருளை 'கனக்குடில்' என்ற சொல்லால் விளக்கினார்; (வீரசுவர்க்கத்துப்) பொன்மயமான குடிசை என்றலும் ஒன்று. உறுதியுரைத்தவர் - வீடுமன் துரோணன் விதுரன் கண்ணன் முதலியோர் பற்பலர். ஒன்பது + பத்து - தொண்ணூறு: "ஒன்பதனொடு பத்தும்" என்னுஞ் சூத்திர விதி. (86) வேறு. 87.-இதுவும், அடுத்த கவியும்- சகுனி துரியோதனனுக்குத் தைரியங் கூறுதல். அருகு சாயை போல்வாழு மனுசர்யாரும் வானேற உருகி மாழ்கி நீசோக முறினுமீள வாரார்கள் மருக வாழி கேள் போரின்மடிவு றாத பூபாலர் முருக வேளை யேபோல்வர் முரணறாத கூர்வேலோய். |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ - ள்.) அருகு - (உனது) அருகிலே, சாயை போல் - நிழல் போல, வாழும் - பிரியாதுவாழ்ந்திருந்த, அனுசர் யாரும் - தம்பிமா |