ரெல்லோரும், வான் ஏற - வீரசுவர்க்கத்திற்குச் செல்ல, (அதனால்), நீ உருகி மாழ்கி சோகம் உறினும் - நீமனமுருகிமயங்கி விசனப்பட்டாலும், மீள வாரார்கள் - (இறந்த அவர்கள்) மறுபடி திரும்பிவர மாட்டார்கள்; மருக - மருமகனே! வாழி - வாழ்வாயாக; கேள் - (யான் சொல்லும் வார்த்தையைக்) கேட்டு நடப்பாயாக; முரண் அறாத கூர்வேலோய் - வலிமைநீங்காத கூரியவேலாயுதத்தை யுடையவனே! போரில்மடிவுறாத பூபாலர் - யுத்தத்தில் (இறந்தவர் போக) இறவாமலுள்ள அரசர்கள், முருக வேளையே போல்வர் - (பலபராக்கிரமங்களிற்) குமாரக்கடவுளையே போல்வார்கள்; (எ - று.) முன்னிரண்டடி - "ஆண்டாண்டுதோறு மழுதுபுரண்டாலும், மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா" என்ற உலகவியல்பையும், பின்னிரண்டடி- எஞ்சியுள்ள அரசர்களது பகையழிக்கும் வன்மையையுங்கூறியன. 'வாழி' என மாமன் மருமகனை வாழ்த்தினான். வேள் என்ற சொல் - விரும்பப்படுபவ னென்று பொருள்படும்; அழகியவனென்று கருத்து. காமவேளைவிலக்குதற்கு, 'முருகவேள்' என்றார். முருகு - அழகு இளமை தெய்வத்தன்மை; அவற்றையுடையவன் முருகன். இதுமுதற் பதினொரு கவிகள் - முதற்சீரும் நான்காஞ்சீரும் புளிமாச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ் சீரும்தேமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியச்சந்த விருத்தங்கள். தனன தான தானான தனன தானதானான - என்பதுஇவற்றிற்குச் சந்தக் குழிப்பாம். (87) 88. | கிருதநாமனால்வேதகிருபனாதியோரான நிருபர்சேனைசூழ்போதநிமிரவோடிமாறாது பொருதுசீறிமேன்மோதுபுலியினேறுபோல்வாரை முரசகேதுவோடோடமுரணுபோரின்மூள்வோமே. |
(இ -ள்.) கிருத நாமன் - கிருதவர்மா வென்னும் பெயருடையவனும், நால் வேத கிருபன் - நான்குவேதங்களையும் அறிந்த கிருபாசார்யனும், ஆதியோர் ஆன - முதலியோராகிய, நிருபர் - அரசர்களும், சேனை - சேனைகளும், சூழ் போத - சூழ்ந்துவர, (நாம்), நிமிர ஓடி - நெருங்கச் சென்று, மாறாது பொருது - இடைவிடாமற் போர் செய்து,- சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை - கோபங்கொண்டு பிறர்மேல் தாக்குகிற ஆண்புலிபோல்பவரான பகைவர்களை, முரச கேதுவோடு ஓட - முரசக்கொடியையுடைய யுதிட்டிரனுடனே ஓடிப்போம்படி, முரணு - வலிமையாகச் செய்கிற, போரில் - போர்த்தொழிலில், மூள்வோமே - முயல்வோமே; (எ - று.) ஈற்றுஏகாரம் - தேற்றவகையால், வலியப்போர்தொடங்கிச் செய்து, பகைவரையோட்டுதல் எளிதென்ற கருத்தைக்காட்டும். முரசகேது - வேற்றுமைத்தொகையன்மொழி. (88) |