பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்77

97.-சகதேவன் சகுனிமேல்வேலெறிதல்.

சகுனியாவிபோமாறுசபதவாய்மைகோடாமன்
மகிபனேவுவேல்போலவழுவுறாமன்மேலோட
உகவையோடுமாமாயனுதவுகூரநீள்வேலை
இகலொடேவினான்வீமனிளவலானபோர்மீளி.

     (இ -ள்.) வீமன் இளவல் ஆன போர் மீளி - வீமனது தம்பியான
போரில் வலிய சகதேவன்,- சகுனி ஆவி போம் ஆறு - சகுனியின் உயிர்
நீங்கும்படி, சபதம் வாய்மை கோடாமல் - (தான் முன்பு கூறியுள்ள)
சபதவார்த்தை தவறாமல்,- மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல்-(கீழ்த்)
துரியோதனராசன் (தன்மேல்) எறிந்த வேலாயுதம்போலக் கொல்லுதல்
தவறாமல், மேல் ஓட - மேலே விரைந்து பாயும்படி, உகவையோடு மா
மாயன்உதவு கூர நீள் வேலை - மகிழ்ச்சியுடனே சிறந்த கண்ணன்
(தனக்குக்)கொடுத்ததொரு கூர்மையுடைய நீண்ட வேலாயுதத்தை, இகலொடு
ஏவினான் -வலிமையோடு செலுத்தினான்; (எ - று.)

     (கீழ்92, 93 - கவிகளிற் கூறியபடி) சகுனிக்குப் பரிந்துவந்த
துரியோதனன் சகதேவன் மேல் எறிந்த வேல் அவனுக்கு மூர்ச்சை
மாத்திரத்தை விளைத்துக் கொல்லாதுவிட்டமைபோல, இப்பொழுது
சகதேவன்சகுனிமேலெறியும் வேல் அவனைக் கொல்லாமல் விடுதலில்லை
யென்பது,'மகிபனேவு வேல்போல வழுவுறாமல் மேலோட' என்பதனால்
விளக்கப்பட்டது. உகவை - உகத்தல்: தொழிற்பெயர்: உக - பகுதி, வை -
விகுதி. திரௌபதியைத் துகிலுரிந்த காலத்தில் சகதேவன் தான் சகுனியைக்
கொல்வதாகச் சபதஞ்செய்துள்ளதனால் அதைத் தவறாது நிறைவேற்றுமாறு
வேலெறிந்தனனென்பார், 'சபதவாய்மைகோடாமல்' என்றார்.  "சகுனிதனை
யிமைப்பொழுதிற் சாதேவன் துணித்திடுவேன் சமரிலென்றான்" எனக் கீழ்ச்
சூதுபோர்ச்சருக்கத்தில் வந்தமை யுணர்க.                      (97)

வேறு.

98.-சகுனி யிறந்ததனால்போரொழிந்து துரியோதனன்
கலங்கல்.

தாவிய வெம்பரி மாவிர தத்திடைசாதேவன்
ஏவிய வேலொடு சௌபல ராசனிறந்தானென்று
ஓவிய தெங்கணும் வெஞ்சமர்பார்முழு துடையானும்
ஆவி யழிந்தவு டம்பெனவன்மை யழிந்தானே.

     (இ -ள்.) சாதேவன் ஏவிய வேலொடு - சகதேவன் எறிந்த
வேலாயுதத்துடனே, சௌபலராசன் - சகுனி, தாவிய வெம் பரி மா
இரதத்திடை- தாவிச்செல்லும் வேகமுள்ள குதிரைகள் பூட்டிய தேரிலே,
இறந்தான் -,என்று - என்ற காரணத்தால், எங்கணும் - எவ்விடத்தும், வெம்
சமர் -கொடிய போர், ஓவியது - ஒழிந்தது: பார் முழுது உடையானும் -
பூமிமுழுவதையுந் தன்தாகக்கொண்டு