ஆளுகிறதுரியோதனனும், ஆவி அழிந்தஉடம்பு என - உயிர்நீங்கிய உடல்போல, வன்மை அழிந்தான் - வலிமைகெட்டான்; (எ - று.) வேலொடுஇறந்தான் - வேல்பட்டமாத்திரத்தில், அதனோடுகீழ் விழுந்து இறந்தானென்க. இனி, 'வேலொடு' என்றதிலுள்ள 'ஒடு' என்னும் மூன்றனுருபைக் கருவிப்பொருளில் வந்ததெனக்கொண்டு, வேலினால் என்று உரைப்பினும் அமையும். நான்காமடியிற்கூறிய உவமையால், உடம்பு தொழில்செய்தற்கு உயிர் இன்றியமையாச்சிறப்பினதாயிருத்தல் போலத் துரியோதனனது செய்கைகளுக்கெல்லாம் சகுனியே மூலகாரணமென்பது நன்குவிளங்கும். இதுமுதல் ஆறு கவிகள் - ஈற்றுச்சீரொன்று மாங்காய்ச்சீரும்' மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட கலித்துறைகள்; காப்பியக்கலித்துறை: விருத்தக்கலித்துறை யென்பதும் இது. (98) 99.-துரியோதனன்நிலைகலங்குதல் தும்பியில்வாசியினீடிரதத்திலொர்துணையின்றிப் பம்பியசேனையழிந்துவரும்படிபாராதான் தம்பியர்யாவருமாதுலனும்பலதமரும்போய் அம்பியிழந்தபெருங்கடல்வாணரினலமந்தான். |
(இ -ள்.) தும்பியில் - யானைகளிலும், வாசியில் - குதிரைகளிலும், நீடுஇரதத்தில்-உயர்ந்ததேர்களிலும், ஒர் துணை இன்றி - (தனக்குத்) துணையாவதுஒன்றுமில்லாமல், பம்பிய சேனை அழிந்து வரும்படி - நிறைந்த (தனது)சேனை அழிந்து மீளும் விதத்தை, பாராதான் - (ஒருகாலும்) பார்த்திராததுரியோதனன்,-தம்பியர் யாவரும் - (தனது) தம்பிமாரெல்லோரும், மாதுலனும் -மாமனான சகுனியும், பல தமரும்-(தனது) சுற்றத்தார்கள் பலரும், போய் -ஒழிந்ததனால், அம்பி இழந்த பெரு கடல் வாணரின் - மரக்கலத்தையிழந்தபெரிய கடற்பிரயாணிகள்போல, அலமந்தான் மிகவருந்தினான்; (எ - று.) உவமையணி. 'பாராதான்' என்றது, இதுவரையில் ஒருநாளும் இப்படிப்பட்ட தன்சேனையழிவைப் பார்த்திராதவ னென்ற பொருளோடு, இப்படி தனக்கு ஒருகால் நேருமென்று எதிர்பாராதவனென்ற கருத்தையும், இன்று நேர்ந்த அழிவைப் பார்த்துப் பொறுக்கமாட்டாதவனாயினா னென்ற கருத்தையும் விளக்கும். போய் - போக என எச்சத்திரிபாக்குக; [நன்-வினை-27.]பலதமர்-சைந்தவன் வீடுமன் முதலிய உறவினர்களும், கர்ணன் பகதத்தன்முதலிய நண்பர்களும். (99) 100.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: துரியோதனன் ஒருமந்திரபலத்தால் தன்பக்கத்தவரில் இறந்தவரையெல்லாம் பிழைப்பித்துப் போர்செய்யக் கருதிச் செல்லுதலைக் கூறும். ஒருமதிவெண்குடையிருகவரிக்குலமூருஞ்சீர் இரதமதங்கயமிவுளிபணிக்கொடிமுதலான |
|