-நல் நாளம்மூலம் நளினத்தைமலர்த்தி - நல்ல நாளத்தோடுகூடிய (எல்லாவற்றுக்கும்) மூலாதாரமான (தனது இதயத்) தாமரையை மலரச்செய்து,- நாவால் - நாக்கினால், உன்னாமல் உன்னும்முறை மந்திரம்ஓதினான் - வெளிப்படையாக உச்சரியாமல் அந்தரங்கமாக ஜபஞ்செய்யும் முறைமையையுடைய மந்திராட்சரத்தை ஜபித்தான்; சிரத்திற் பிங்கலை யிடை நாடிகளுக்குநடுவே புருவமத்தியிலே சிந்தும் அமுதத்தை யோகவகையால் உட்கொண்டு அதனால் உடம்பின் தாபம் ஒழியும்இயல்பை 'தன்னாகமுற்றுமெலிவின்றித்தயங்குமாறு' என்பதனாற் குறித்தார்;இதயம் தாமரைமலர்வடிவானதொரு மாம்சாகாரமாய் இருத்தலாலும், அம்மனம்எல்லாச் செயல்களுக்கும் முக்கிய காரணமாதலாலும் 'மூலநளினம்' எனப்பட்டது. நாளம்-உள்துளையுள்ள பூந்தண்டு; இது நளினத்துக்கு அடைமொழி. குவிந்துகவிந்துள்ள இதயகமலத்தைநிமிர்த்து மலரச்செய்ய வேண்டுதலால், 'நளினத்தை மலர்த்தி' என்றார். முதலடியால், இவன் இன்று புதுமையாக யோகஞ்செய்யத் தொடங்கினாலும் அதனை மரபுமுறைபிறழாமல் ஒழுங்குபடச்செய்த அருமையைத் தெரிவித்தார். உன்னாமலுன்னுதல் - ஒலிவெளிப்படாதபடி அகத்திலே ஜபித்தல். யோகம் - சிலநியமங்களோடு செய்யுந் தவம். இனி, தன்னாகமுற்றும்....மலர்த்தி - தனது தேகத்தினுள், முற்றிலும் வாட்டமின்றிவிளங்கும் ஆறு வகையான நல்லநாளத்தையுடைய மூலாதாரம் முதலான ஆதாரநளினங்களை மலரச்செய்து; இனி, ஆதாரமலர்களைமலர்த்தி எனவே, அவற்றி னரும்பொருளையுணர்ந்து மேற்சென்று பிரமரந்திரத்தில் சகஸ்ரதளதாமரையை மலரப்பண்ணி, அதிலிருக்கிற சந்திரமண்டலத்தின் அமிருதத்தை மூலாக்கினியாலிளகப்பண்ணி அதனைச் சர்வநாடி வழியாக உடலிலே நிரப்பி அதனாலாகிய சுகோதயத்தால் பூரணசோதனையைப் பாவித்து எனப்பொருள் விரிப்பர் ஒருசாரார். (105) 106.-முன்பு சோழனுக்குமுதுகிட்ட வீரர்களின் நிலைமை. இதயஞ்சிறிதுங்கலங்காதவிறைவனிவ்வாறு உதகந்தனிற்புக்குயர்மந்திரமோதும்வேலை மதவெங்கயப்போர்வளவற்குமுதுகுதந்த விதமண்டலீகர்புலிகண்டமிருகமொத்தார். |
(இ -ள்.) இதயம் சிறிதும் கலங்காத - (எப்படிப்பட்ட ஆபத்திலும்) மனம் சிறிதுங் கலங்குதலில்லாத, இறைவன் - துரியோதனராசன், இஆறு - இப்படி, உதகந்தனில் புக்கு - நீரிலே புகுந்து, உயர் மந்திரம் ஓதும் வேலை -சிறந்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது,-மதம் - மதத்தையுடைய,வெம் - கொடிய, கயம் - யானையையும், போர் - போர்வல்லமையையுடைய,வளவற்கு - சோழனுக்கு, முதுகு தந்த - புறங்கொடுத்த, விதம் மண்டலீகர் -பலவகைப்பட்ட அரசர்கள், புலிகண்ட மிருகம் ஒத்தார் - புலியைக் கண்டுஅஞ்சியோடும் மான்போன்றார்கள்; (எ - று.)-உவமையணி. |