பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்85

    இக்கவி - கீழ் 95, 96-ஆம் கவிகளின் தொடர்ச்சியுடையது.  வளவன்-
மிக்கவளமுடையவன்.                                         (106)

107.-அசுவத்தாமன்முதலியோர் வந்து சகுனியிறந்தமை
காணுதல்.

பரபாவகமாம்பரித்தாமனும்பாய்பரித்தேர்க்
கிருபாரியனுங்கிருதப்பெயர்க்கேடிலோனும்
ஒருபாலிறைகொண்டொழிசேனையுந்தாமுமீண்டு
பொருபாரதப்போர்புரிசௌபலன்பொன்றல்கண்டார்.

     (இ -ள்.) பர பாவகம்ஆம் - பகைவர்களுக்கு அக்கினிபோன்றவனான,
பரித்தாமனும் - அசுவத்தாமாவும், பாய் பரி தேர் - பாய்ந்து செல்லுங்
குதிரைகள் பூண்ட தேரையுடைய, கிருப ஆரியனும் - கிருபாசாரியனும்,
கிருதன் பெயர் - கிருதவர்மனென்னும் பெயரையுடைய, கேடு இலோனும் -
அழிவில்லாத அரசனும், (ஆகிய இவர்கள்),- ஒரு பால் இறை கொண்டு -
ஒருபக்கத்தில் ஒதுங்கித் தங்கி, ஒழி - இறவாது நின்ற, சேனையும் -
சேனைகளும்,தாமும் - தாங்களுமாக, மீண்டு - திரும்பிவந்து, பொரு
பாரதம் போர் புரிசௌபலன் பொன்றல் கண்டார் - தாக்கிச் செய்த
பாரதயுத்தத்தைமூட்டிவிட்டவனான சகுனி இறந்துகிடத்தலைப் பார்த்தார்கள்;
(எ - று.)

    பரபாவகமாம் பரித்தாமன் - அகப்பட்ட பொருள்களைத் தீ அழித்தல்
போலப் பகைவர்களைத் தவறாமல் அழிக்கும் அசுவத்தாமனென்க. பரபாவகம்
- பரர் - பிறர், பாவகம் - பரிசுத்தமாகச் செய்வது.  தேவர்களை
இருதிணையாலுஞ் சொல்லலாமாதலால், 'பாவகம்' என்று
அஃறிணையாகக்கூறினார்.  இனி, 'பரபாவகமாம்' என்பதற்கு -
பரம்பொருளினிடத்தில் மனஞ் செலுத்துதலையுடைய என்று உரைப்பாரு
முளர்.பாவகம் - பாவனை.  ஒரு பால் இறை கொண்டொழி சேனை -
ஏதோஒருமூலையில் ஓடிப்பதுங்கிக்கிடந்து அரிதில் உயிர்தப்பிய சிறுசேனை
யென்க.இறை - இறுத்தல்; தங்குதல்.  துரியோதனனுக்குப் பலசமயங்களிற்
பலவகையாகத் துர்ப்போதனை செய்து மகாபாரத யுத்தத்தை மூட்டி
விட்டவனாதலால், சகுனியை 'பொருபாரதப் போர்புரி' என்றது.  (107)

108.-கண்ட அவர்கள்கலக்கமும் வியப்பும் அடைதல்.

கண்டார்மிகவும்பரிவோடுகலக்கமுற்றார்
தண்டாரகைதோய்விசும்பொத்தசமரபூமி
கொண்டான்முரசக்கொடியோனெனக்கோபமிஞ்சி
விண்டார்மிகவும்வியந்தாரவர்வீரமம்மா.

     (இ -ள்.) (கீழ்க்கூறியவர்கள்), கண்டார் - (சகுனியிறந்ததைக்) கண்டு,
பரிவோடு கலக்கம் மிகவும் உற்றார் - விசனத்தையுங் கலக்கத்தையும்
மிகுதியாக அடைந்தார்கள்;  தண் தாரகை தோய் - குளிர்ச்சியான
(ஒளியையுடைய) நக்ஷத்திரங்கள் நிறைந்த, விசும்பு - ஆகாயத்தை, ஒத்த -
போன்ற, சமரபூமி - யுத்தகளத்தை, முரசம் கொடி