போர்அரசன் தனை - சேனைத்தொகுதியுடனே மிகுதியாகச் செய்யும்போரையுடைய துரியோதனராசனை, எவண் காண்குதும் - எவ்விடத்தில் (நாங்கள்) பார்க்கப் பெறுவோம்: காட்டுக - காண்பிப்பாயாக' என்றார் - என்று சொன்னார்கள்; (எ - று.) சஞ்சயன் - திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் போரில் நாள்தோறும் நிகழுஞ் செய்திகளை இரவிற்சென்று திருதராட்டிரனுக்குக்கூறிவந்தான். இவன் வியாசமுனிவனது அருளால் அம்முனிவனிடம்தத்துவப்பொருள்களைக் கேட்டுணர்ந்த ஞானியாதலால், 'வேதமுனிவன்'என்றும், 'அங்கை நெல்லிக்கனி கண்டனையாய்' என்றுஞ் சிறப்பித்துக்கூறப்பட்டான். இரு தாளின் முடிகள்சேர்த்தி - சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு.அங்கை நெல்லிக்கனி - எளிதில் நன்றாய் அகமும் புறமும் முழுவதும்அறியப்படுதற்கு உவமம். (110) 111.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: சஞ்சயன் கூறும் விடை. இவ்வோர்விரைவினிவன்றன்னைவினவவின்னோன் அவ்வோனுயிருக்கழிவில்லையமரின்மோதி வெவ்வோடையானைவிறன்மன்னவர்வீயயாரும் ஒவ்வோன் மறித்துமமர்மோத வுணர்த லுற்றான். |
(இ -ள்.) இவ்வோர் - (அசுவத்தாமன் முதலிய) இவர்கள், விரைவின் -விரைவாக, இவன் தன்னை - இந்தச் சஞ்சயனை வினவ . (இவ்வாறு) வினாவ,-(அதற்கு), இன்னோன் - இச் சஞ்சயன்,-அவ்வோன் உயிருக்கு -அந்தத்துரியோதனனுயிருக்கு, அழிவுஇல்லை - (இப்பொழுது) அபாயமில்லைஅமரில் மோதி - போரில் தாக்கி, வெம்ஓடை யானை விறல் மன்னவர் -கொடுமையையும் நெற்றிப்பட்டத்தையுமுடைய யானைச்சேனையையுடையவலிமையுள்ள அரசர்கள், வீய - இறக்க, யாரும் ஒவ்வோன் - எவரும்(தனக்குச்) சமமாகப் பெறாத துரியோதனன், மறித்தும் அமர் மோத உணர்தல்உற்றான் - மீண்டும் (பாண்டவரோடு) போர்செய்ய ஆலோசித்தான்; (எ - று.)-இக்கவியில், 'வினவ', என்றது, 113 - ஆங் கவியில் 'என' என்றவினையெச்சத்தைக்கொள்ளும்.
அமரில் மோதி மன்னவர் வீய - போரில் தாக்கிப் பல துணையரசர்களும்இறந்தபின்பு என்றபடி; இனி, போரில் தாக்கப்பட்டுப் பாண்டவர்கள்இறக்குமாறு என்றுமாம். இவ்வோர், அவ்வோன் என்பவை - இ அ என்னுஞ்சுட்டடியாப் பிறந்த பெயர்கள்; 'வினவவஞ்சன்' என்றும் பாடம். (111) 112. | ஈண்டுச்சமரினிறந்தோர்களெவருமின்றே மீண்டுற்பவிக்கவிடுவித்துவிரகினோடும் பாண்டுப்பயந்தோர்படையாவுமடியமோதப் பூண்டுத்தமமாமறைகொண்டகன்பொய்கைபுக்கான். |
|