பக்கம் எண் :

92பாரதம்சல்லிய பருவம்

வீரனானஅருச்சுனனுடன், நால்வரும் - மற்ற நான்கு பாண்டவர்களும், (ஆக
ஐவரும்), சேர - ஒருசேர, என் கை மூரி வெம் கணைகளாலே - எனது
கையாலெய்யப்படும் வலிய கொடிய அம்புகளாலே, முடி தலை துணிவர் -
கிரீடத்தையணிந்த தங்கள்தலை அறுபடுவார்கள்; (எ - று.) - கண்டாய் -
தேற்றம்.

    இதுவும், அடுத்தகவியும் - அசுவத்தாமனொருவனது வார்த்தை.

    என்னிடத்து நம்பிக்கை வைத்து என்னை நீ சேனாபதியாக்காததனால்
இப்படிப்பட்ட எனது திறமையை யான் காட்டுதற்கு இடமில்லாமற்
போயிற்றென்பது, உட்கோள்.  இப்படிப்பட்ட திறமை அசுவத்தாமனுக்கு
இருத்தலை, "ஆசாரியன் புதல்வ னச்சுவத்தார்கோமாற்குச்,
சேனாபதிப்பட்டஞ்சேர்த்தினால் - மீதவனை, வெல்லப் போர்செய்வகைக்கு
வெண்டலையிலூணுகந்த, செல்வற்குந் தானரிதே செப்பு" என்ற
பெருந்தேவனார்பாரதத்தாலும்அறிக.  "தோன்றாதோற்றித்
துறைபலமுடிப்பினுந், தான்தற்புகழ்தல்தகுதியன்றே"என்ற பொதுவிதிக்கு,
'தன்னுடைஆற்றலுணராரிடையில் தன்னைப்புகழ்தலுந்தகும் வல்லோர்க்கு'
என்ற விலக்கு உள்ளதனால், 'வீரியம் விளம்பல் போதாதுஆயினும்
விளம்புகின்றேன்' என்றான்; இனி, என்திறமை சொல்லிமுடியுந்தரத்ததன்று,
ஆயினும் ஒருவாறு சொல்லுகிறே னென்றும்பொருள்கொள்ளலாம்.  'யான்
அவர்கள் தலையைத்துணிப்பேன்' என்றுவினையைத் தன்மேலேற்றாமல்
'அவர்கள் தலைதுணிபடுவார்கள்' என்றுஅவர்கள்மேல் ஏற்றிக் கூறியது,
அலட்சியத்தைக் காட்டும்.                                  (118)

119.-அசவத்தாமன் செய்தசபதம்.

எல்லவன்வீழுமுன்னம்யாரையுந்தொலைத்துவேலைத்
தொல்லைமண்ணளித்திலேனேற்றுரோணன்மாமதலையல்லேன்
வில்லெனும்படையுந்தீண்டேன்விடையவன்முதலோர்தந்த
வல்லியகணையும்பொய்த்தென்மறைகளும்பொய்க்குமாதோ.

     (இ -ள்.) எல்லவன் வீழும் முன்னம் - சூரியன் அஸ்தமித்தற்கு
முன்னே, யாரையும் தொலைத்து - பகைவர்களெல்லோரையும் ஒழித்து,
வேலைதொல்லை மண் - கடல்சூழ்ந்த பழமையான நிலவுலகமுழுவதையும்,
அளித்திலேன்ஏல் - (உனக்கு நான்) கொடேனாயின், (யான்), துரோணன் மா
மதலை அல்லேன் - துரோணனது சிறந்த குமாரனல்லேன்; (அன்றியும்), வில்
எனும் படையும் தீண்டேன் - வில்லென்ற ஆயுதத்தையும் தொடேன்:
(மேலும்),விடையவன்முதலோர் தந்த - விருஷபவாகனத்தையுடைய
சிவபிரான்முதலானதேவர்கள் (எனக்குக்) கொடுத்துள்ள, வல்லிய கணையும் -
வலிய அம்புகளும்,பொய்த்து - வீணாய்விட, என் மறைகளும் பொய்க்கும் -
எனக்குரியவேதங்களும் பொய்யாய்விடும்; (எ - று.)-வல்லிய - வலிய
என்பதன் விரித்தல். பொய்த்து - பொய்க்கவென எச்சத்திரிபு.        (119)