பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்93

120.

மோதுமோகரப்போர்வென்றுமுடித்துமோவொன்றிலொன்றிற்
சாதுமோவிரண்டுமல்லாற்றரணிபர்க்குறுதியுண்டோ
யாதுமோதெளிதிநின்போலேற்றமுள்ளவர்க்கிவ்வாறு
போதுமோபூண்டபூண்டபுகழெலாம்போய்விடாதோ.

     (இ -ள்.) ஒன்றில் - ஒருபக்ஷத்தில், மோதும் மோகரம் போர் -
தாக்கிச்செய்யும் உக்கிரமான யுத்தத்தில், வென்று முடித்துமோ (பகைவரைச்)
சயித்துஒழிப்போமோ? (அன்றி), ஒன்றில் - மற்றொரு பக்ஷத்தில், சாதுமோ -
(அப்போரிற் பகைவரால் அடிபட்டு) இறப்போமோ? இரண்டும் அல்லால் -
இவ்விரண்டுவிதமு மல்லாமல், தரணிபர்க்கு - அரசர்களுக்கு, உறுதி
உண்டோ- துணியத்தக்க விதம் வேறுஉளதோ? [இல்லை யென்றபடி];
யாதுமோ தெளிதி- [இவ்விரண்டுவிதத்தில்] எதையாயினும் ஒன்றை
நிச்சயிப்பாய்; நின்போல்ஏற்றம் உள்ளவர்க்கு - உன்னைப்போல மேன்மை
யுள்ளவர்களுக்கு, இ ஆறுபோதுமோ - (ஓடியொளிதலாகிய) இந்தவிதம்
தகுமோ? [தகாதுஎன்றபடி];பூண்ட பூண்ட புகழ் எலாம் - (நீ இதுவரையிலும்)
அழகிதாக மிகவும்அடைந்த கீர்த்திமுழுதும், போய் விடாதோ -
அழிந்துபோய்விடாதோ? (எ -று.)

     -புகழெலாம் போய்விடாதோ - ஒருமைப்பன்மைமயக்கம், போய்
விடாதோ - போய்விடுமன்றோ; இரண்டு எதிர்மறை உடன்பாடு உணர்த்தித்
தேற்றத்தை விளக்கும்.                                        (120)

121.

பாண்டவர்முடியவென்றிப்பாரெலாமுனக்கேதந்தால்
மாண்டவர்தம்மைநின்வாய்மறைமொழிதன்னைக்கொண்டு
மீண்டவராக்கிப்பின்னைவேறொருபகையுமின்றி
ஆண்டவரிவரேயென்னத்துணைவரோடாளலாமே.

     (இ -ள்.) பாண்டவர் முடிய வென்று - பாண்டவர் இறக்கும்படி
(அவர்களைச்) சயித்து, இ பார் எலாம் உனக்கே தந்தால் -
இந்தப்பூமிமுழுவதையும் உனக்கே (நாங்கள்) கொடுத்தால், (அதன்பின்பு நீ),
மாண்டவர் தம்மை நின்வாய் மறைமொழிதன்னை கொண்டு மீண்டவர்
ஆக்கி- (போரில்) இறந்த உன்பக்கத்தவரையெல்லாம் உனது வாயிலுள்ள
வேதமந்திரத்தால் பிழைத்தவராகச்செய்து, பின்னை பிறகு, வேறு ஒரு
பகையும்இன்றி ஆண்டவர் இவரே என்ன - ஒரு பகையுமில்லாதபடி
(உலகத்தை)அரசாண்டவர் இவர்களேயென்று (கண்டோர்) கொண்டாடும்படி,
துணைவரோடுஆளல்ஆமே-(உனது)தம்பிமார்களுடன் கூடி அரசாட்சி
செய்யலாமே; (எ -று.)

     நின்வாய் மறைமொழி - உனக்குச் சுவாதீனமாய்த் தெரிந்துள்ள
இரகசியமான மந்திர மென்க.  மாண்டவர், மாள் - பகுதி.         (121)

122.-அவைகேட்டுஞ் சலியாமல்துரியோதனன்
தவநிலைநிற்றல்.

என்றிவைபோல்வபன்னூறியம்பவுமிராசராசன்
ஒன்றினுங்கவலைசெல்லாவுணர்வுடையுளத்தனாகி