பக்கம் எண் :

242

Tamil Virtual University

பாலன் முதல் வேண்டுமென்று
பாரத்தவம் செய்து
தொண்ணூறு நாளாகத்
துளசிக்கு நீர்வார்த்து
முன்னூறு நாளாக
முல்லைக்கு நீர் வார்த்து
ஐந்நூறு நாளாக
அரசுக்கு நீர் வார்த்து
வேண தவஞ் செய்து
வேம்புக்கு நீர் வார்த்து
வெந்த மாத்தின்றால்
விரதம் கலையுமிண்ணு
பச்சை மாத்திண்ணு
பகவானைப் பூசை செய்து
செம்பொன் மலரெடுத்துச்
சிவனாரைப் பூசை செய்து
பசும் பொன் மலரெடுத்து
பார்வதியைப் பூசை செய்து
வெள்ளை மலரெடுத்து
வினாயகரைப் பூசை செய்து
நவகிரகப் பூசை
நாயகியும் தான் செய்து
அன்னையும் தந்தையும்
அருந்தவங்கள் தான் செய்து
முந்தித் தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து
மங்களமாக
மைந்தரைப் பெற்றெடுத்தாள்
மலரில் உதித்தவர்தான்
மா தவத்தால் வந்தவர்தான்
பூவில் உதித்தவர்தான்
புண்ணியத்தால் வந்தவர்தான்
தவத்தால் பிறந்தவர்தான்
தருமத்தால் வந்தவர்தான்
பிச்சிப் பூத் தொட்டிலிலே
புரண்ட குமாரர்தான்
மல்லிகைப் பூந் தொட்டிலிலே
வளர்ந்த குமாரர்தான்