|
பெண்: |
மளுக்கிட்ட
கம்பிடிச்சி
கொளுக்கிட்ட வெச்சி
தாரேன்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
கொளுக்கிட்ட தின்னாலே
தண்ணி தாகம் எடுக்கும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
தண்ணி தாகம்
எடுத்தா
நீரு மோரு தாரேன்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
நீரு மோரு குடிச்சா
நித்திரையும் வந்திடும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
நித்திரையும்
வந்தா
தட்டி எழுப்பரேன்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
தட்டி
எழுப்பினால்
காலை பொறக்கும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
காலை பொறந்தா
கீரை வெரைக்கலாம்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
வேலி
கட்டினால்
வெள்ளாடு தாண்டும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
வெள்ளாடு தாண்டினா
பாலு கறக்கலாம்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
பாலு கறந்தா
பூனை குடிக்கும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
பூனைக் குடிச்சா
பூனையை அடிக்கலாம்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
பூனையை அடிச்சா
பாவம் சுத்தும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
பாவம்
சுத்தினா
காசிக்குப் போகலாம்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
காசிக்குப் போனா
காலை நோகும்
போடி பொண் மயிலே
|
|
பெண்: |
காலை
நொந்தால்
குதிரை வாங்கலாம்
வாடா என் சாமி
|
|
ஆண்: |
குதிரை வாங்கினா
சவாரி செய்யலாம்
போடி பொண் மயிலே
|