5
வாளா வலை முடிந்து வங்கடைக்கு மால்
முடிந்து
கோலா வலை முடித்து குறுக்கட்டாமல் முடித்து
காஞ்சி வனமடியே கள்ளரோட காடடியே
இருளடைந்த சோலையிலே இணைபிரிந்த மான் போல
மானோடா ஓடுறது மறியடா நல்ல தம்பி
மானோடும் தூரமெல்லாம் தானோட வல்லவியோ
வள்ளம் வித்தேன் வலையும் வித்தேன்
வாளா வலை புனையும் வித்தேன்
கொம்பை வித்தேன் குழலை வித்தேன்
குடிக்க இருந்த செம்பை வித்தேன்
எல்லாம் வித்துக் கள் குடித்தேன்
ஏங்குனாப்பில தூங்கிவிட்டேன்
தூங்கி முழிச்சபய தோணி கட்டி வாழ்ந்தபய
வாராயோ காத்த நீயே வளம் பெரிய சோழகமே
சோலையிலே அவ கிடந்து
சுட்ட நண்டுக்கால் பெறக்கி
கால் வழியே ஓடுதம்மா கடிக்கு தம்மா கட்டெறும்பு
கட்டச்சியோ நெட்டச்சியோ
காயலான் தங்கச்சியோ
தங்கச்சியோ பட்டணத்தாள்
தனியே நல்ல முரசு விட்டாள்
போடு லக்கை போடு லக்கை
கைமாத்திப் போடுலக்கை
கள்ளன் வந்தான் திருடன் வந்தான்
கட்டாமைக் காரன் வந்தான்
|