பக்கம் எண் :

465

Tamil Virtual University

அவள் குறை

அவள் விதவை. அவளது துன்பங்களைச் சொல்லி அழுதால் மரமும் உருகும் ; பறவைகளும் கண் கலங்கும். என்ன குறையென்று அவள் சொல்லா விட்டாலும், விதவைக்கு நேரும் சமூகக் கொடுமைகளையும் குடும்பத் துன்பங்களையும், பல நாட்டுப் பாடல் மூலம் நாம் அறிந்துள்ளோமல்லவா?

பூ மரத்துக் கீழ் நின்னு
பொங் கொறை சொல்லி அழுதா
பூ மரத்து மேலிருக்கும்
புறாவும் இறை உண்ணாது
மாமரத்துக் கீழ நிண்ணு
மங்க குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இறை உண்ணாது.

வட்டார வழக்கு : பொங்கொறை-பெண் குறை.

உதவியவர் :
கவிஞர் சடையப்பன்

இடம்:
சேலம் மாவட்டம்.