அகிலபுவ . . . . ணைந்தன,
(இ-ள்)
அகில புவனங்களுக்கு - எல்லா உலகங்களிலுள்ள உயிர்கட்கும், அமுதிடும் - உணவு கொடுத்த,
நிரந்தரிக்கு - ஒன்றாய் நிலைத்த நல்லறம் ஆற்றும் உமாதேவிக்கு, இடம் அமர்
- இடப்பாகத்தே விரும்பி உறையும்படியான, வரங் கொடுத்து - வரத்தைக் கொடுத்து, அகலாது
- அவளை விட்டுப் பிரியாது, அணைந்தன - தழுவிக் கொண்டன (புயங்கள்). புவனம், இட
ஆகுபெயர். அமுதம் இடுதலாவது, இருநாழி நெல்லைப் பெற்று அறம் வளர்த்து அதன் காரணமாக
உணவளித்தல்.
நிரந்தரி - அந்தரமின்றி எங்கும் நிறைந்தவள். ‘அமர்தல்
மேவல்’ (தொல். சொல். உரி 892) ஆகலின் ‘அமர்’ என்பதற்கு விரும்பி யுறையும் என்ற
பொருள் கொள்ளப்பட்டது.
அழலுருவ . . . . மிர்ந்தன,
(இ-ள்)
அழலுருவம் - கனல் உருவத்தை, அன்று பெற்று - திருமணக்காலத்தில் பெற்ற, ஒரு புறவம்
மைந்தனுக்கு - ஒப்பற்ற சீகாழியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தருக்கு, ஒளிவடிவம்
தந்து - ஒளி வடிவைத் தந்து, அருட் பொலிவான் - கருணைப் பொலிவால், நிமிர்ந்தன
- விளங்கின.
புறவம், சீகாழி:புறா பூசித்தமையால் சீகாழிக்குப் புறவம்
என்ற பெயர் ஏற்பட்டது. புறா, புறவு என்று ஆகி அம் சாரியை பெற்றுப் புறவம் என நின்றது.
குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனோ
டுகர மேற்றலும்
இயல்புமாந் தூக்கின்’ |
என்பது நன்னூல் (172)
கரடமத . . . . கொண்டன,
(இ-ள்)
கரட மதம் - மதம் பாய்கின்ற சுவட்டையும், கும்பம் மத்தகம் - குடம் போன்ற மத்தகத்தையும்,
கபடம் - வஞ்சகத்தையும் உடைய, தந்தியை - யானையை, சமர் பொருது - போரில் பொருது,
வென்று - வெற்றி கொண்டு, அதள் உரித்து - அதன் தோலை உரித்து, ஆடை கொண்டன -
போர்வையாகப் போர்த்தன.
தந்தி: தந்தத்தை உடையது தந்தி; யானை: கயாசுரன் என்னும்
யானை. அன்றித் தாருகாவனத்து இருடியர் ஏவிய யானையுமாம்.
“அத்தி யுரித்து அதுபோர்த்
தருளும் பெருந்துறையான்”
(திருவாசகம்: திருப்பூவல்லி: 19)
கடலமுதை . . . . ளந்தன,
(இ-ள்)
கடல் அமுதை - திருப்பாற் கடலில் தோன்றிய அமுதத்தை, உம்பருக்கு உதவ - மேலிடத்தவராகிய
தேவர்களுக்கு உதவும் பொருட்டு, எழில் கந்தரத்து - தனது அழகிய மிடற்றில், இலகு கறை
கொண்டு - அவ்வமிர்தத்திற்குமுன் தோன்றி விளங்குகின்ற நஞ்சைக்கொண்டு, திக்கு
இருநாலும் - எட்டுத்திசைகளையும், அளந்தன - அளந்தன (புயங்கள்.)
கறை - கறுப்பு என்னும் நிறப்பெயர்; நஞ்சுக்குப் பண்பாகு
பெயர். |