பக்கம் : 1004 | | நம்பி விதூடகனைத் தளைவிடுவிக்க நங்கையை வேண்டல | 1616. | போதிவ ரலங்கலொடு பூண்முலைஞெ முங்கக் காதலன் முயங்குபு கலந்தினி திருந்து மாதவனு மேதமில னாதலின்ம டந்தாய் தீதுபடு சீற்றமொழி யென்றுதெளி வித்தான். | (இ - ள்.) போது இவர் அலங்கலொடு பூண்முலைஞெமுங்க - இதழ்கள் விரிகின்ற மலர்மாலையோடே, அணிகலன்களையுடைய முலைகள் அழுந்துமாறு, காதலன் - முறுகிய காதலுடையானாகிய திவிட்டமன்னன், முயங்குபு - சுயம்பிரபையைத் தழீஇ, கலந்து - பொருந்தி, இனிது இருந்து - அவ்வின்பத்திலே வயமிழந்து நெடிது இருந்த பின்னர், மடந்தாய் - நங்கையே, மாதவனும் - அப்பார்ப்பன மகனும், ஏதம் இலன் - தீங்கு ஒன்றும் செய்திலன், ஆதலின் - ஆதலாலே, தீதுபடு சீற்றம் - எம்போன்றார்க்குத் தீமை தருவதாய உனது சினத்தை, ஒழி - ஆறக்கடவாய், என்று - என்று பணிமொழி கூறி, தெளிவித்தான் - அவள் ஊடலை நன்கு தீர்த்தனன், (எ - று.) வாயில் பெற்றுத் தழீஇய நம்பி மேலும் மாதவனும் தீதிலன் ஆதலின் மடந்தாய் தீதுபடு சீற்றமொழி என்று பணிமொழி கூறி ஊடலை நன்கு தீர்த்தான் என்க. | (486) | | நங்கை விதூடகனைத் தளை விடுவித்தலும் அவன் ஆடல் பாடல் இயற்றலும் | 1617. | இட்டதளை 1தம்மொடிரு தோளுமிடை வீக்கிக் கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள் ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான். | (இ - ள்.) இட்ட தளை தம்மொடு - காலிலே இடப்பட்ட மாலையாகிய விலங்கோடே, தோளும் இடைவீக்கிக் கட்டி விடு பூம்பிணையல் - இரண்டு கைகள் இடையேயும் இறுகக் கட்டப்பட்ட பூமாலையாகிய தளையையும், கைவிடலும் - உழைக்கல மகளிர்கள் தேவியின் குறிப்பறிந்து அகற்றி விட்டவுடனே, மெய்யுள் ஒட்டிவிடு காதலொடு- உடலோடே ஒட்டிவிடுவதைப் போன்றதோர் அன்புடைமையோடே, வந்து - தேவியின் முன்னர் வந்து, உருவுகொண்டு - கோலங்கொண்டு, பட்ட பல பாடலினோடு ஆடல்பல செய்தான் - சுவைபட்ட பலவாகிய இசைப்பாட்டைப் பாடுதலோடே பலவேறு கூத்துக்களையும் ஆடலானான், (எ - று.) | |
| (பாடம்) 1 யோடுமிரு. | | |
|
|