பக்கம் : 1006 | | | 1620. | வேண்டு மேமனம் வேண்டுமே பூண்ட பொன்னணி மார்பினாய் நீண்ட மாங்கனி 1நேர்தொறும் வேண்டு மேமனம் வேண்டுமே. | (இ - ள்.) பூண்ட பொன் அணி மார்பினாய் - பூணப்பட்ட பொன்னாலாய அணிகலன்களை உடைய மார்புடைய பெருந்தேவியே, நீண்ட மாங்கனி நேர்தொறும் - உயர்ந்துள்ள தேமாவின் கனிகளைக் காணுந்தோறும், வேண்டுமே, மனம் வேண்டுமே - அவற்றைப் பெரிதும் என் மனம் விரும்பாநிற்கும், வேண்டுமே மனம் வேண்டுமே - அவற்றைப் பறித்துக் கொடு என்று என்னைப் பெரிதும் அம்மனம் இரவாநிற்கும், (எ - று.) மார்பினாய்! நீண்டமாங்கனி காண்டொறும், என்மனம் அவற்றைப் பெரிதும் விரும்பும், விரும்பி அவற்றைப் பறித்துத்தருக! என என்னை இரவாநிற்கும்; என்றான் என்க. | (490) | | பாரிசாத காமவல்லி திருமணம் | வேறு | 1621. | இன்னன பாடி யாட 2வீர்ங்கனி பலவுங் கூவி முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக் கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார். | இதுமுதல் 8 செய்யுள் ஒரு தொடர் பாரிசாத காமவல்லி மணம் உரைப்பன (இ - ள்.) இன்னன - இவை போல்வன பலவும், பாடி ஆட - பாடிக் கொண்டு அவ்விதூடகன் கூத்தாடுதல் செய்ய, ஈர்ங்கனி பலவும் - தேவி ஈரிய கனிகள் பலவற்றையும், கூவி - வரவழைத்து, முன்னவன் - பார்ப்பன னாகிய அவ்விதூடகன், ஆர ஊட்டி - ஆசைதீர உண்ணும்படி செய்து, முறுவலோடு - அவன் அவாவுடன் உண்ணுதலை நோக்கிப் புன்முறுவலுடன், அமர்ந்த பின்னை - அங்கு வீற்றிருந்த பின்னர், மன்னிய பாரிசாதம் - நிலைபெற்ற பாரிசாத மரத்தை, மணமகனாக நாட்டி - மணமகனாக வைத்து, அங்காமவல்லி கன்னி நாட்டி - அழகிய காமவல்லியை மணமகளாக வைத்து, கடிவினை தொடங்கலுற்றார் - அத்திருமண மக்கட்குத் திருமண விழா நிகழ்த்தத் தொடங்கினார், (எ - று.) | |
| . (பாடம்) 1 காண்டொறும். 2 இருங்கனி. | | |
|
|