பக்கம் : 1007 | | முன்னவன் - முதல் வகுப்பினனாகிய பார்ப்பனன் என்க. விதூடகன் இவ்வாறு பல பாடலைப் பாடி ஆட, தேவி கனிபல தருவித்து ஊட்ட முறுவலோடமர்ந்த பின்னர், பாரிசாத காமவல்லி மணவிழாத் தொடங்கினர் என்க. | (491) | | | 1622. | திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங் குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்க ணாளும் பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப் பாரி சாதம் அருமணி 1யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார். | (இ - ள்.) திருமணி நிழற்றும் - உயரிய மணிகள் ஒளிரும், செம்பொன் திலதம் மா முடியினானும் - செவ்விய பொன்னாலியன்ற மாண்பு மிக்க பெரிய முடியை உடைய திவிட்டநம்பியும், குருமணி கொம்பர் அன்ன - நிறமமைந்த பவளப் பூங்கொம்பு போன்ற, கொழுங்கயல் நெடுங் கண்ணாளும் - கொழுவியநீண்ட கயல் மீன் போன்ற கண்ணையுடைய சுயம்பிரபையும், பருமணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் - பரிய மணிகள் பதித்துப் பசிய பொன்னாலே மேடை அமைக்கப்பட்ட பாரிசாத மரம், அருமணி அரும்பித் தாழ்ந்த - அரிய மணிகளைப்போல அரும் பெடுத்துத் தழைத்துள்ள, அந்தளிர் பொதும்பர் - அழகிய தளிர்மிக்க பூம்பொழிலை, சார்ந்தார் - எய்தினார், (எ - று.) முடியினானும், நெடுங்கணாளும் பாரிசாதம் அரும்பெடுத்துத் தழைத்துள்ள பூம்பொழிலை எய்தினர், என்க. | (492) | | நம்பியின் ஏனைய மனைவிமார்களும் வந்தெய்துதல் | 1623. | வரிவளை வயிரொ டேங்க வாரணி முரச மார்ப்பக் கருவளர் கனபொற் 2சோலைக் கறங்கிசை பரந்த போழ்தில் திருவள ரலங்கள் மார்பிற் செங்கணன் றேவி மார்கள் உருவளர் கொம்ப ரன்னா ளருளறிந் துழைய ரானார். | (இ - ள்.) வரிவளை வயிரொடு ஏங்க - வரிகளையுடைய சங்குகள் கொம்புகளோடே முழங்க, வார் அணி முரசம் ஆர்ப்ப - வாராலே கட்டப்பெற்ற முரசங்கள் ஆரவாரிப்ப, கருவளர் கனபொற் சோலை - கருமை மிக்க முகில் தவழும் அழகிய பொழிலின்கண்ணே, கறங்கு இசை பரந்த போழ்தில் - முழங்கும் ஒலி பரவியபொழுது, திருவளர் அலங்கன் மார்பிற் செங்கணான் - திருமகள் வதியும் மாலையணிந்த மார்பினையுடை திவிட்ட னுடைய, தேவிமார்கள் - ஏனைய மனைவிமார், உருவளர் கொம்பர் அன்னாள் - எழில்மிக்க பூங்கொம்பை ஒத்த சுயம்பிரபையின், அருள் அறிந்து - திருவுள்ளக் குறிப்பாகிய அருளை அறிந்து, உழையர் ஆனார் - ஆங்கு வந்து அவர்களின் பக்கத்தே எய்தினார், (எ - று.) | |
| (பாடம்) 1 அரும்பிற் றாழ்ந்த. 2சாலைக் கற்பகம். | | |
|
|