பக்கம் : 1008 | | வளை கொம்போடே முழங்க, முரசம் ஆர்ப்ப, இசை பரந்தபோது, நம்பியின் ஏனைத் தேவியர் அனைவரும், சுயம்பிரபையின் குறிப்பறிந்து, ஆங்கே வந்து கூடினர், என்க. | (493) | | 1624. | செய்கய லுருவ வாட்கட் டேவிதன் குறிப்பிற் சேர்ந்த மங்கையர் வனப்பு நோக்கி மணிவண்ணன் மகிழ்ந்து மற்றப் பொங்கிய விளமென் கொங்கை மகளிர்தம் புருவ வில்லால் அங்கய னெடுங்க ணென்னும் பகழியா லழுத்தப் பட்டான். | (இ - ள்.) செங்கயல் உருவ வாட்கண் - செவ்விய கயல் மீன் போன்ற வடிவினையுடைய வாள்போன்ற கண்களையுடைய, தேவி தன் குறிப்பில் - கோப்பெருந்தேவியாகிய சுயம் பிரபையின் குறிப்பினாலே, சேர்ந்த - ஆங்கு வந்தெய்திய, மங்கையர் - தன் மனைவியரின், வனப்பு நோக்கி - அழகினைப்பார்த்து, மணிவண்ணன் மகிழ்ந்து - திவிட்டநம்பி மகிழ்ச்சி மிக்கு, பொங்கிய விளமென் கொங்கை - பரிய இளையவாய மெல்லிய முலைகளை யுடைய, அம் மகளிர் தம் புருவவில்லால் - அம்மகளிர்களுடைய புருவமாகிய வில்லாலே ஏவப்பட்ட, அம்கயல் நெடுங்கண் என்னும் - அழகிய கயல்போன்ற நீண்ட கண்கள் என்கிற, பகழியால் - அம்புகளாலே, அழுத்தப்பட்டான் - ஏறுண்டான், (எ - று.) பெருந்தேவியின் குறிப்புண்மையால், ஆண்டு வந்து குழுமிய தேவி மாரின் அழகினை நோக்கி மகிழ்ந்த நம்பி, அவர்கள் கண்ணம்பாலே ஏறுண்டான் என்க. | (494) | | 1625. | குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையால் புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி 1பொதிந்த வாட்கண் இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான். | |
| (பாடம்) 1 பரந்த. | | |
|
|