பக்கம் : 1013
 

 

1632. அம்பொன்செய் கலாப வல்கு
     லந்தழை புனைந்த வஞ்சிக்
கொம்பஞ்சு மருங்கு னோவக்
     குவிமுலை முறிகொண் டப்பிச்
1செம்பொன்செய் சுருளை மின்னச்
     செவிமிசைத் தளிர்கள் சேர்த்திக்
கம்பஞ்செய் களிற்றி னான்றன்
     கண்களைக் களிப்பித் திட்டார்.
 
     (இ - ள்.) அம்பொன்செய் கலாப அல்குல் - அழகிய பொன்னாலே இயற்றப்பட்ட
காஞ்சியை அணிந்த அல்குலிடத்தே, அந்தழை புனைந்த - அழகிய தழையை
உடுத்தப்பட்ட, வஞ்சிக்கொம்பு அஞ்சு - வஞ்சிக்கொடியும் யாம் இவளிடை யொவ்வோம்
என்று அஞ்சுதற்கேதுவாகிய, மருங்குல் நோவ - இடை வருந்தும்படி, குவிமுலை - பருத்த
தம்முலைகளின் மிசை, முறிகொண்டு அப்பி - இளந்தளிர்களை அப்பி, செம்பொன் செய்
சுருளை மின்ன - செவ்விய பொன்னாலாகிய குதம்பை மிளிர, செவிமிசை -
காதுகளின்மேல், தளிர்கள் சேர்த்தி - இளந்தளிர்களைச் செருகி, கம்பம்
செய்களிற்றினான்றன் - தூணிடத்தே யாக்கப்பட்ட அரசுவாவினையுடைய திவிட்ட
நம்பியின், கண்களைக் களிப்பித்திட்டார் - கட்பொறியை மிகமகிழும் படி செய்தனர்,
(எ - று.)

     கலாபமும் தழையும் புனைந்த வஞ்சிக்கொடி போலும் நுண்ணிடை நோவும்படி
குவிந்த முலையிடத்தே தளிரப்பி மின்னச் சேர்த்திக் களிற்றினான் கண்களைத் தேவியர்
களிப்பித்திட்டார் என்க.

 (502)

 

குராவம்பாவை கொண்டு பாராட்டல்

1633. விரவம்பூந் தளிரும் போது
     2மிடைந்தன மிலைச்சு வாரும்
அரவம்பூஞ் சிலம்பு செய்ய
     வந்தளிர் முறிகொய் வாரு
மரவம்பூங் கவரி யேந்தி
     மணிவண்டு மருங்கு சேர்த்திக்
குரவம்பூம் பாவை கொண்டு
     3குழவியோ லுறுத்து வாரும்.
 
 

     (பாடம்) 1 செப்பஞ்செய் சுருளை மின்னுச். 2 மிடைந்தவர்.
3 குழவிபோலுறுத்துவாரும்.