பக்கம் : 1014 | | (இ - ள்.) விரவு அம் பூந்தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சு வாரும் - கலந்துள்ள அழகுமிக்க இளந்தளிர்களையும் மலர்களையும் கொண்டு செறியப்புனைந்த மாலைகளைத் தம் தலையிலே சூடுவார்களும், பூஞ்சிலம்பு அரவம் செய்ய - அழகிய தம் சிலம்புகள் ஒலிப்ப, அந்தளிர் - அழகியவாய்த் தளிர்க்கின்ற, முறிகொய்வாரும் - தளிர்களைக் கொய்வார் களும், மரவம் பூங்கவரி ஏந்தி - வெண்கடப்ப மலர்களாகிய கவரிகளை ஏந்திக்கொண்டு, மணிவண்டு மருங்குசேர்த்தி - மாணிக்க வளையல்களைப் பக்கத்திலே செறித்து, குரவம் பூம்பாவை - குராமலராகிய பாவைகளைக் கைக்கொண்டு, குழவி யோல் உறுத்துவாரும் - தம் குழவிகளைத் தாலாட்டுதல் போலே தாலாட்டுவாரும், (எ - று.) ஓலுறுத்தல் - தாலாட்டுதல். குராமரத்தின் மலர் குழவிபோலிருந்தலின் அதனைக் குழவியெனக் கொண்டு மகளிர் ஆடுதல் மரபு என்க. மலைச்சுவாரும் கொய்வாரும் ஏந்தி, சேர்த்தி கொண்டு ஓலுறுத்து வாரும் ஆயினர் என்க. | (503) | | 1634. | பாவையும் விலங்கு சாதிப் படிமமும் 1பறப்பை தாமும் கோவையு முகத்து மாக்கிக் குலவிய விதழ தாக ஓவியர் புனைந்த போலு மொளிமலர்ப் பிணையன் மாலை தேவியர் மருளச் செய்து சிகழிகை சேர்த்து வாரும். | (இ - ள்.) பாவையும் - பதுமைகளைப் போன்றும், விலங்கு சாதிப் படிமமும் - யானை முதலிய விலங்குகளின் உருவம் போன்றும், பறப்பை தாமும் - பறவைகளைப் போன்றும், கோவையும் முகத்தும் ஆக்கி - தொண்டையலிலும் முகப்புக்களினும் இயற்றி, குலவிய இதழதாக - பொருந்திய மலர்களையுடையதாக, ஒவியர் புனைந்த போலும் - சித்திரக்காரர் களால் வரையப்பட்டவற்றை ஒத்த, ஒளிமலர்ப் பிணையன்மாலை - ஒளியுடைய மலர்களால் இயன்ற பிணையலாகிய மாலைகள், தேவியர் மருளச்செய்து - பெருந்தேவியார் வியக்கும்படி புனைந்து, சிகழிகை சேர்த்துவாரும் - அவரது கொண்டையிலே சூட்டுவாரும், (எ - று.) பதுமை போலவும், விலங்குகள் பறவைகள் போலவும், மலரால் உருவமைய மாலைபுனைந்து சூடுதல் பண்டைய மரபு. இதனை, “அத்தி ஆளியோடு ஆமான் அட்டமங்கலம் அரிய பத்தி பாவைபல் பறவை பயில்கொடி திமிசொடு பிறவும் வித்தகம் பெரிதுடைய விசித்திர உருவம் நன்மலரால் சித்த நன்னெறி பயந்தான் திருவடிக் கருச்சனைசெய்தாள்“ (நீல - குண்டலகே - செய் - 1052.) என்னும் நீலகேசிச் செய்யுளானும் உணர்க. | |
| (பாடம்) 1 பறவைப்பற்றி, பறவைப்பத்திக். | | |
|
|