பக்கம் : 1017
 

செஞ்சொற் செய்யுளின்பம் துய்த்தல்

1638. மாம்பொழின் மருங்கு சூழ்ந்த
     மணிச்சிலா தலத்து மேலாற்
காம்பழி பணைமென் றோண்மேற்
     கருங்குழ 1றுவண்டு வீழப்
பூம்பொழில் விளங்கத் தோன்றும்
     பொன்னிதழ் மறிந்து நோக்கித்
தேம்பொழி செய்யு 2ளின்பஞ்
     செவிமுதற் சேர்த்து வாரும்.
 
     (இ - ள்.) மாம்பொழில் மருங்கு சூழ்ந்த - தேமாவின் பொழில் பக்கங்களிலே
சூழப்பட்ட, மணிச்சிலா தலத்துமேல் ஆல் - மணி மேடையின்மீது, காம்பு அழி பணைமென்
தோள்மேல் - மூங்கிலை அழகாலே தோற்கச்செய்த பருத்த தம் தோள்கள் மேலே,
கருங்குழல் துவண்டு வீழ - கரிய கூந்தல் நெகிழ்ந்து வீழாநிற்ப, பூம்பொழில் விளங்கத்
தோன்றும் பொன்இதழ் - அப்பூம் பொழில் திகழுமாறு தோன்றாநின்ற பொன்னிற மலரின்
காட்சியை, மறிந்து நோக்கி - மீளமீள நோக்கியவராய், தேம்பொழி செய்யுள் இன்பம் -
இன்பத்தைப் பொழியாநின்ற செய்யுளை ஓதி அவ்வின்பத்தை, செவிமுதல் சேர்த்துவாரும் -
தோழியர் செவிகளிலே சேர்க்கின்றவரும், (எ - று.)

     பொழிலிடத்தேயுள்ள மணி மேடைமீதமர்ந்து, தம் பணைத்தோள் மேலே கருங்குழல்
துவண்டுவீழ, அப்பொழிலின் மலர்க் காட்சியைக் கூர்ந்து நோக்கி, அக்காட்சியினைச்
செஞ்சொற் கவிகளாக வடித்துத் தம் தோழியர் செவியிடத்தே பெய்வாரும் என்க.
இச்செய்யுள் நல்லிசைப்புலவரின் இயல்பினை நன்கு காட்டுதல் காண்க.

 (508)

 
ஊசலாடல்
1639. கோதையுங் குழைவின் பட்டின்
     கொய்சகத் தலையுந் தாழ
மாதர்வண் டொருங்கு பேர
     மழையிடை நுடங்கு மின்போல்
போதலர் பொதும்பிற் றாழ்ந்த
     பொன்னெழி லூச றன்மேல்
ஓதநீர் வண்ணற் பாடி
     3நூழிலூ ழியங்கு வாரும்.
 
 

     (பாடம்) 1 திவண்டு. 2 ளின்றுஞ். 3 யூழிநூழி.