பக்கம் : 1021
 

பூம்பொழிலின் நன்றியறிதற் பண்பு

1644. மணங்கமழும் பூமேனி வாசங் கமழ
வணங்கிவருஞ் சோலை யலர்நாற்ற மெய்திக்
கணங்குழையீர் யாமுமக்குக் கைம்மா றிலேமென்
றிணங்கிணரும் போது மெதிரேந்தித் 1தாழ்ந்த.
 
     (இ - ள்.) அணங்கு இவரும் சோலை - அழகு விரியும் அப் பூம்பொழில்,
கணங்குழையீர் - கனவிய குழையினையுடைய தேவியீரே, மணங்கமழும் பூமேனி வாசம்
கமழ - நும்முடைய தெய்வ மணங்கமழும் அழகிய திருமேனியின் மணம் கமழ்தலாலே,
யாம் - யாங்கள், அலர் நாற்றம் எய்தி - எம்மலரிடத்தே மணம் உண்டாகப்பெற்று, உமக்கு
- எமக்கு மணமீந்த நுங்கட்கு, கைமாறு இலேம் - மாற்றுதவி செய்தற்கு இயலாத
வராயினேம், என்று - என்று கூறி, இணங்கு இணரும் போதும் - பொருந்திய
கொத்துக்களையும் மலர்களையும், எதிர் ஏந்தி - அத்தேவியர்க்கு அடியுறையாய் எதிரே
ஏந்தி நின்று, தாழ்ந்த-அவர்களை வணங்கின, (எ - று.)

     அப் பூம்பொழில் தழைந்து தாழ்ந்து கிடத்தல், கனங்குழையீர்! நும்மேனியின் மணம்
பொருந்துதலாலே எம்மலர்கள் மிக்க நறுமணமுடைய வாயின; இவ்வுதவிக்கு யாங்கள்
கைம்மாறு கண்டிலேம், என்று இணரும் போதும் காணிக்கையாக ஏந்தி அவரடிகளிலே
வணங்குதல் போற் றோன்றிற் றென்க.

(514)

 

இதுவுமது

1645. அந்தா ரசோக மசோக மவர்க் கீந்த
செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன
2வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த
கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே.
 
     (இ - ள்.) அம் தார் அசோகம் - அழகிய பூங்கொத்துக்களை உடைய
அசோகமரங்கள், அவர்க்கு - அத்தேவியர்க்கு, அசோகம் ஈந்த - சோகமின்மையை
அளித்தன, செந்தார்த்திலகம் - செவ்விய ஒழுங்குபட்ட திலகமரம், திலகமாய்ச் சேர்ந்தன -
தம் பூந்தாதுக்களாலே அவர் நெற்றியில் பொட்டாயின, மா - தேமா மரங்கள், ஆ - ஆ
ஆ, வந்தார்க்கும் - நம்பால் எய்திய தேவியர்க்கும்,

     ஆதும் - யாமும் உதவுவேம், என்பனபோல் - என்று கருதியன போன்று, தழைந்த -
அவர்க்கு நீழலாகித் தழைத்து நின்றன, கொந்து ஆர்பூஞ்சோலைக்கு -
கொத்துக்களையுடைய அப்பூம் பொழிலுக்கும் உலகு அறிவோ கூடின்றே - சான்றோர் தம்
உணர்ச்சியும் பொருந்துவ தாயிற்று, ஏ : அசை, (எ - று.)
 

     (பாடம்) 1 தாழ்ந்தார். 2 வந்தார்க்கு மாவது, வந்தார்க்கு மாவது மாவது
மென்பனபோல்.