பக்கம் : 1023
 

     வெள்ளித் தண்டின் மேலே பசும்பொன் மடல் போர்த்துத் தேங்கனியும் பொற்றிரளாற்
செய்து வைத்த பொன் வாழைக்கானம் புடையணிந்த செய்குன்றம் என்க.

 (516)

 
1647. கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும்
மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும்
1துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் 2சோதித்துச்
செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே.
 
     (இ - ள்.) கஞ்சுகி மாந்தரும் - மெய்ப்பை புக்க ஏவலரும், காவல் முதியாரும் -
காவற்றொழில் பூண்ட முதுமையாளரும், மஞ்சு இவர் சாரல் - முகில் தவழும்
தாழ்வரைகளையும், மணியறையும் - மணிகளானியன்ற உச்சியினையும், வார்பொதும்பும் -
நீண்ட குறுங்காடுகளையும், துஞ்சு மழை தவழும் - தங்கிய முகில்கள் தவழாநின்ற,
சோலைகளும் - பொழிலிடங் களையும், சோதித்து - ஆராய்ந்து, செஞ்சொலவர்போய் -
செவ்விய சொல்லையுடைய அம்மாந்தர்கள் சென்று, திசைகாவல் கொண்டாரே - திக்கு
களிடத்தே காவற்றொழிலை மேற்கொள்வாராயினர், (எ - று.)

     அப்பொழிலைக் காக்கும் காவலர், மணியறையும், பொதும்பும், சோலைகளும்
சோதித்துப் போய்த் திசைகளிலே காவலாக அமைந்தனர், என்க.

(517)

 
1648. தோகை மடமஞ்ஞை 3சோலைப் பரப்பினபோன்
மாக மழைவண்ணன் காதன் மடந்தையர்கள்
ஆகமணி சூழ்சார 4லைய விரும்பொழில்வாய்ப்
5போக மணிமே கலைபுலம்பப் புக்கார்.
 
     (இ - ள்.) சோலைப்பரப்பின - சோலையிடத்தனவாகிய, தோகை மடமஞ்ஞைபோல் -
தோகையை உடைய அழகிய மயில்கள் போன்று, மாக மழைவண்ணன் - வானத்தே
இயங்கும் முகில் நிறமுடைய திவிட்ட மன்னனின், காதல் மடந்தையர்கள் - காதலுக்குரிய
தேவிமார்கள், ஆகம் மணி சூழ்சாரல் - தன் மேலே மணிகளையுடைய சூழ்ந்த
தாழ்வரையிடத்தே, ஐய - அழகியவாய, இரும் பொழில்வாய் - பெரிய பூம்பொழிலின்
கண்ணே, போக மணிமேகலை புலம்பப் புக்கார் - நுகர்தற்கினிய மணிமேகலை என்னும்
அணிகலன் ஆரவாரிக்குமாறு புகுந்தனர், (எ - று.)
 
 
     (பாடம்) 1 மஞ்சு. 2 சோதிச்சு. 3 சோலையைப் பார்ப்பன போல்.
4றைவிரும். 5போகமணி புரளக்.