பக்கம் : 1023 | | வெள்ளித் தண்டின் மேலே பசும்பொன் மடல் போர்த்துத் தேங்கனியும் பொற்றிரளாற் செய்து வைத்த பொன் வாழைக்கானம் புடையணிந்த செய்குன்றம் என்க. | (516) | | 1647. | கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும் மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும் 1துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் 2சோதித்துச் செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே. | (இ - ள்.) கஞ்சுகி மாந்தரும் - மெய்ப்பை புக்க ஏவலரும், காவல் முதியாரும் - காவற்றொழில் பூண்ட முதுமையாளரும், மஞ்சு இவர் சாரல் - முகில் தவழும் தாழ்வரைகளையும், மணியறையும் - மணிகளானியன்ற உச்சியினையும், வார்பொதும்பும் - நீண்ட குறுங்காடுகளையும், துஞ்சு மழை தவழும் - தங்கிய முகில்கள் தவழாநின்ற, சோலைகளும் - பொழிலிடங் களையும், சோதித்து - ஆராய்ந்து, செஞ்சொலவர்போய் - செவ்விய சொல்லையுடைய அம்மாந்தர்கள் சென்று, திசைகாவல் கொண்டாரே - திக்கு களிடத்தே காவற்றொழிலை மேற்கொள்வாராயினர், (எ - று.) அப்பொழிலைக் காக்கும் காவலர், மணியறையும், பொதும்பும், சோலைகளும் சோதித்துப் போய்த் திசைகளிலே காவலாக அமைந்தனர், என்க. | (517) | | 1648. | தோகை மடமஞ்ஞை 3சோலைப் பரப்பினபோன் மாக மழைவண்ணன் காதன் மடந்தையர்கள் ஆகமணி சூழ்சார 4லைய விரும்பொழில்வாய்ப் 5போக மணிமே கலைபுலம்பப் புக்கார். | (இ - ள்.) சோலைப்பரப்பின - சோலையிடத்தனவாகிய, தோகை மடமஞ்ஞைபோல் - தோகையை உடைய அழகிய மயில்கள் போன்று, மாக மழைவண்ணன் - வானத்தே இயங்கும் முகில் நிறமுடைய திவிட்ட மன்னனின், காதல் மடந்தையர்கள் - காதலுக்குரிய தேவிமார்கள், ஆகம் மணி சூழ்சாரல் - தன் மேலே மணிகளையுடைய சூழ்ந்த தாழ்வரையிடத்தே, ஐய - அழகியவாய, இரும் பொழில்வாய் - பெரிய பூம்பொழிலின் கண்ணே, போக மணிமேகலை புலம்பப் புக்கார் - நுகர்தற்கினிய மணிமேகலை என்னும் அணிகலன் ஆரவாரிக்குமாறு புகுந்தனர், (எ - று.) | | | (பாடம்) 1 மஞ்சு. 2 சோதிச்சு. 3 சோலையைப் பார்ப்பன போல். 4றைவிரும். 5போகமணி புரளக். | | |
|
|