பக்கம் : 1028
 

     (இ - ள்.) விண்டுசுடர் தயங்கு மேதகு மாணிக்கம் கண்டு - வெளிப் பட்டு
ஒளிதிகழ்கின்ற மேன்மைமிக்க மாணிக்கமணியினைப் பார்த்து, கவின் விரிந்த காயாந்துணர்
- அழகு விரிந்த காயாவின் பூங்கொத்துக்கள் என்று கருதி, இவைகொண்டு குழற்கு
அணிதும் என்று - இவையிற்றைக் கொய்து எம் கூந்தலிலே சூடுவேம் என்று எண்ணி,
கொளல் உறுவார் - அவையிற்றைக் கொய்பவர், வண்டு வழிபடர - முன்னரே அவையிற்றை
அவ்வாறு கருதி ஆண்டு மொய்த்துள்ள வண்டுகள் அவையிற்றைவிட்டு அம்மகளிர்
கண்களை மலராகக் கருதிவீழாநிற்ப, வாட்கண் புதைத்து - தம் வாள்போன்ற கண்களைத்
தம் கையால் புதைத்தனராய், இயல்வார் - புறம்போகா நிற்பர், (எ - று.)

     மாணிக்கச் சுடர்கண்டு, இவை காயாவின் பூந்துணர் என்று, கொய்து சூட்டக் கை
நீட்டியவழி, அவற்றில் மொய்த்த வண்டு தேவியர் கண்ணை மலரெனக் கருதி வந்து
வீழ்தலாலே, வாட்கண் புதைத்தனராய்ப் புறம் போவார், என்க.

(526)
 
1657. வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண்
டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால்
போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிகள்
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார்.
 
     (இ - ள்.) வேய் ஓங்கு சாரல் - மூங்கில்கள் ஓங்கி வளராநின்ற மலைச்சாரலிலே,
விளைபுனம் காவல்கொண்டு - தினை முதலிய விளைந்துள்ள புனங்களைக் காவல்செய்து,
ஆயோ என மொழியும் - கிளிகடியும் மகளிர்கள் “ஆயோ“ என்று கூவும், அம்மழலை
இன்னிசையால் - அந்த மழலையுடைய இனிய குரலாலே, போய் ஓங்கு பூஞ்சோலை வாழும்
புனக்கிளிகள் - வெருவிப்போய் அப்பூம்பொழிலிலே வாழும் அத்தினைப்புனக்கிளிகளை,
மாயோன் மடந்தைமார் - திருமாலாகிய திவிட்ட நம்பியின் தேவிமார்கள், கூவி - தாமும்
ஆயோ எனக் கூவி, மகிழ்விப்பார் - அக்கிளிகளை மகிழும்படி செய்வர், (எ - று.)

     கிள்ளைகள் ஈண்டும் தினைப்புனம் உண்டு போலும் என்று மகிழ்ந்தன என்க.
தேவியர் ஆயோ எனக் கூவிப் புனக்கிளிகளை மகிழ்விப்பர் என்க.
 

(527)

 
1658. பூந்தளிர் தாழ்ந்த பொழிறயங்கு பொன்வரைவாய்
1ஈர்ந்தளிர் மேனியா ரிவ்வா றினிதியலக்
காந்தளங் குன்றின் கனபொன் மணியறைமேல்
ஏந்திளங் கொங்கை மகளிர் சிலரியைந்தார்.
 
 

    (பாடம்) 1 ஈர்ந்தளிர மேனிய