பக்கம் : 1029 | | (இ - ள்.) பூந்தளிர் தாழ்ந்த பொழில் தயங்கு பொன்வரைவாய் - அழகிய தளிர்கள் தழைத்துத் தாழ்ந்த அப்பூம்பொழிலின்கண் உள்ள பொன்னாலாய செய்குன்றத்தில், ஈர்ந்தளிர்மேனியார் - நெய்ப்புடைய தளிர்போன்ற திருமேனியையுடைய அவ்வெழில் மகளிர்கள், இவ்வாறு இனிது இயல - இவ்வாறு இன்புற்று ஆடாநிற்ப, காந்தள் அங்குன்றின் - கோடல்கள் தழைத்த அழகிய மற்றொரு மலையில், கனபொன் மணியறை மேல் - கனவிய பொன்னும் மணியும் நிறைந்த பாறையிடத்தே, ஏந்திளங்கொங்கை உயர்ந்து இளையவாகிய முலைகளையுடைய, மகளிர் சிலர் இயைந்தார் - மகளிர்கள் சிலர் எய்தினர், (எ - று.) தேவியர் இவ்வாறு பொழிலாட்டயரா நின்ற பொழுது அவருட் சிலர், ஒரு குன்றின் உச்சியிலே சென்றனர் என்க. | (528) | | அம்மனையும் வள்ளையும் ஆடுதல் | 1659. | பைம்பொ 1னறைமேற் பவழ முரலாக வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி அம்பொன் மலைசிலம்ப வம்மனை 2வள்ளையு கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார். | (இ - ள்.) பைம்பொன் அறைமேல் - பசிய அப்பொன் பாறையின் மேலே, பவழம் உரலாக - பவழத்தாலியன்ற உரலிலே, வம்ப மணி பெய்து - புதிய மணிகளைச் செந்நெலாகப் பெய்து, வான் கேழ் மருப்பு ஓச்சி - தூய வெண்ணிறமமைந்த யானைக் கோடாகிய உலக்கைகளாலே குற்று, அம்பொன் மலை சிலம்ப - அழகிய அப்பொன்மலை எதிரொலி எடுப்ப, அம்மனை வள்ளையுடன் அம்மனைப்பாடலும் வள்ளைப்பாடலும், கம்பஞ் செங் யானை கரியவனை - பகைவரை நடுக்கஞ்செய்யும் யானை போல்வானாகிய திவிட்டநம்பியை, பாடினார் - ஏத்திப் பாடலானார்கள், (எ - று.) அம்மனை - அம்மனை எறிந்து மகளிர் ஆடும் ஆடல், வள்ளைப்பாட்டு - உலக்கைப் பாட்டு. அங்ஙனம் சென்ற தேவியர் பவழ உரலிலே மணி அரிசி பெய்து மருப்புலக்கை ஓச்சிக் கரியவனாகிய நம்பியை அம்மனைப் பாட்டினும் வள்ளைப் பாட்டினும் புகழ்ந்து பாடுவாராயினர் என்க. | (529) | |
| (பாடம்)1 னறைமேலப். 2 வள்ளையுட். | | |
|
|