பக்கம் : 1031
 

     வலம்புரி முழக்கினான்; சிலைகைக் கொண்டான், அத்துணையானே சண்டை
தலைபனிப்புக் கண்டான், பொன்னகந் தோய்ந்தான்; அவன் யாரெனில், கார்மேகவண்ணன்
என்றாள் என்க.

(531)

 
1662. செம்பொன்செய் யாழியான் சேதாம்ப னீன்முடியான்
அம்பொ னிதியு மருங்கலமுங் கைப்படுத்தான்
நம்பு மணிமேனி நங்கை நலநுகர்ந்தான்
கம்பஞ்செய் யானைக் கருமேக வண்ணனே.
 
     (இ - ள்.) செம்பொன்செய் ஆழியான் - செவ்விய பொன்னாலியன்ற ஆழிப்படையை
உடையோன், சேதாம்பல் நீள்முடியான் - செங்கழுநீர்ப் பிணையல் சூடப்பெற்ற நீண்ட
முடியையுடையோன், அம்பொன் நிதியும் - அழகிய பொன் மயமான சங்கநிதி
பதுமநிதிகளையும், துருங்கலமும் - சங்கு முதலிய அருங்கலங்களையும், கைப்படுத்தான் -
கைக்கொண்டருளினான், நம்புமணி மேனி - சிறந்த பவளம் போன்ற மேனியையுடைய,
நங்கை - சுயம்பிரபையின், நலம் நுகர்ந்தான் - பெண்மைநலத்தை நுகர்ந்தான்,

     (அவன் யார் எனில்) கம்பம் செய்யானை - பகவரை நடுக்கங்காணும் யானைபோல்
வானாகிய, கருமேக வண்ணனே - நம் தலைவனாகிய கரிய முகில் நிறமுடைய திவிட்ட
நம்பியே ஆவன், (எ - று.)

     ஆழியான், முடியான், நிதியும் அருங்கலமும், கைப்படுத்தான், நங்கை நலனுகர்ந்தான்,
அவன் யாரெனில்; கருமேகவண்ணன் என்றாள், என்க.

(532)

 

நம்பி ஒரு தெய்வத்தை யானை உருக்கொண்டு
அம்மகளிர்பாற் செல்ல விடுதல்.

வேறு

1663. மடந்தையர் பாட வாங்கு
     மாபெருந் தேவி நிற்ப
அடைந்தவ ரோடு மாடு
     மார்வநீர் வெள்ளம் வாங்க
1உடைந்தழி மனத்தன் வேந்த
     னுழையதோர் தெய்வங் கூவிப்
படந்தவா 2முகத்து வேழ
     மாகெனப் பணித்து விட்டான்.
 
 

     (பாடம்) 1 உடைந்துழி. 2 முகத் தொர் வேழ.