பக்கம் : 1032 | | (இ - ள்.) மடந்தையர் பாட - இவ்வாறு மகளிர்கள் பாடாநிற்ப, ஆங்கு - அவ்விடத்தே, மா பெருந்தேவி நிற்ப - கோப்பெருந்தேவி நிற்பாளாக, வேந்தன் - திவிட்டநம்பி, உடைந்து அழி மனத்தன் - காமவேட்கையாலே உடைந்து அழிகின்ற மனத்தை உடையனாய், அவரோடும் அடைந்து ஆடும் ஆர்வம் நீர் வெள்ளம் வாங்க - அம்மகளிரோடே கலந்து விளையாடற்கு எழுந்த விருப்பமாகிய நீர் வெள்ளம் தன்னை வலித்தீர்ப்ப, உழையதோர் தெய்வம் கூவி - தன் புறந்திரியும் ஒரு தெய்வத்தை மறைமொழியாலே அழைத்து, படம் தவாமுகத்து வேழம் ஆகு என - முகபாடம் அணிதல் தவிராத முகத்தையுடைய தொரு யானையாகி இம்மகளிர்முன் செல்க என்று, பணித்துவிட்டான் - ஏவி விட்டான், (எ - று.) இவ்வாறு தேவியர் பாட மறைநின்று கேட்ட நம்பி, அவரோடும் ஆடும் ஆர்வம் தன்னை வலிந்து இழக்க, மனமழிந்து ஒரு தெய்வங்கூவி, ஆனை ஆகெனப் பணித்தான், என்க. | (533) | | தெய்வம் யானையாகி வருதல் | 1664. | மைவரை யொன்று 1கோல மணிதயங் கருவி தாழ ஐவனங் கலந்த சார லருகுவந் தணைவ தேபோல் தெய்வமோர் வேழ மாகிச் செய்கடாந் திரண்டு வீழ மைவரு நெடுங்க ணல்லார் நடுங்கவந் தணைந்த தன்றே. | (இ - ள்.) மைவரை ஒன்று - கரியதொரு மலை, கோலமணி தயங்கு அருவி தாழ - அழகிய மணிபோலே விளங்கி அருவிகள் ஒழுகாநிற்ப, ஐவனம் கலந்த சாரல் அருகு வந்து அணைவதே போல் - மலைநெற்கள் பரவிய மலைச்சாரலின் மருங்கே வந்து எய்தினாற்போன்று, தெய்வம் ஓர் வேழமாகி - அத்தெய்வம் ஒரு யானை உருக்கொண்டு, செய் கடாம் திரண்டு வீழ - ஒழுக்கிய மதநீர் மிக்கு ஒழுக, மைவரு நெடுங்கண் நல்லார் - மையூட்டப்பெற்ற நெடிய கண்களையுடைய அம்மகளிர்கள், நடுங்க வந்து அணைந்தது - அச்சத்தாலே நடுங்குமாறு அவண்வந்து எய்திற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.) ஒருமலை மற்றொரு மலைச்சாரலிலே வருமாப்போலே, அத்தெய்யம் ஒரு யானையாகி, மதந்திரண்டுவீழ அம்மலைச் சாரலிலே நல்லார் நடுங்க வந்தணைந்த தென்க., | (534) | | யானையைக் கண்டு மகளிர் அஞ்சுதல் | 1665. | கயில்கலந் 2திருண்டு தாழ்ந்த கருங்குழன் மருங்கு சோர வெயில்கலந் திலங்குஞ் செம்பொன் மிடைமணிக் குழைவில் அயில்கலந் திலங்கு வேற்க ணையரி பிறழ வோடி வீச மயில்கலந் திரிந்த போல மடந்தையர் நடுங்கி னாரே. | |
| (பாடம்) 1 போல. 2 திரண்ட. | | |
|
|