பக்கம் : 1033 | | (இ - ள்.) மடந்தையர் - அம்மகளிர்கள், மயில் கலந்து இரிந்தபோல - மயில்கள் கூடிக் கெட்டோடினாற் போன்று, கயில் கலந்து இருண்டு தாழ்ந்த கருங்குழல் மருங்கு சோர - பிடரின்கட் பொருந்தி இருண்டு தூங்குதலை யுடைய கரிய கூந்தல்கள் அவிழ்ந்து பக்கத்திலே சரியவும், வெயில் கலந்து இலங்கும் செம்பொன்மிடை மணி குழை வில்வீச - ஒளி பொருந்தித் திகழ்கின்ற செவ்விய பொன்னும் மணியும் செறிய இயற்றிய தோடுகள் ஒளி காலவும், அயில் கலந்து இலங்குவேல் ஐயரி கண் பிறழ ஓடி - கூர்மை பொருந்தித் திகழ்கின்ற வேல் போலும் அழகிய வரிபரந்த கண்கள் பிறழவும் அஞ்சி ஓடி, நடுங்கினர் - அஞ்சி நடுங்கினர், ஏ : அசை, (எ - று.) குழல் சோரவும் வில்வீசவும் பிறழவும் மயில்கள் கூடி ஓடுவன போன்று மகளிர்கள் அவ்வியானையைக் கண்டு அஞ்சி ஓடினர் என்க. கயில் - எருத்து, ஐயரி - அழகிய கோடு, கலந்து - சேர்ந்து, | (535) | | சுயம்பிரபை அஞ்சுதலும் நம்பி தோன்றித் தழீஇக் கோடலும் | 1666. | நாண்டனா னிறைந்த நங்கை நடுங்குபு நுடங்கி நோக்கி யாண்டையா ரடிக ளென்னு மாயிடை யஞ்சல் பொன்னே ஈண்டையே னென்னை பட்ட தென்றுசென் றணுகி 1னானால் வேண்டிய விளைத்துக் கொள்ளும் விழுத்தவம் விளைத்து வந்தான். | (இ - ள்.) நாண்தனால் நிறைந்த நங்கை - நாண் என்னும் பெண்மைக் குணம் நிறைந்த சுயம்பிரபை, நடுங்குபு நுடங்கி நோக்கி - அஞ்சி நடுங்கி ஒல்கி நாற்றிசையினும் பார்த்து, அடிகள் யாண்டையார் என்னும் ஆயிடை - நம்மடிகளார் எவ்விடத்துள்ளார் என்று கூறும் அப்பொழுதே, அஞ்சல் பொன்னே - அஞ்சேல் திருமகளே, ஈண்டையேன் - யான் இவ்விடத்தே தான் உளேன், பட்டது என்னை என்று - இங்கே என்ன நிகழ்ந்தது என்று வினவியவனாய், சென்று அணுகினான் - அத்தேவிபாற் சென்றெய்தினான், (அவன் யார் எனில்) வேண்டிய விளைத்துக் கொள்ளும் - தாம் வேண்டியவற்றை வேண்டியபடி விளைவித்துக் கொள்ளுதற்குக் காரணமான, விழுத்தவம் - சிறந்த தவத்தினை, விளைத்து வந்தான் - முற்பிறப்பில் ஆற்றி வந்து தோன்றியவனாகிய திவிட்டன், (எ - று.) | |
| (பாடம்) 1 னானே. | | |
|
|