பக்கம் : 1034 | | “வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப் படும்“ (திருக். செய். 265)என்னும் குறட்கருத்தை ஈண்டுக் காண்க. கோப் பெருந்தேவி நடுங்கி நோக்கி அடிகள் யாண்டையார் என்ன, நம்பி ஈண்டையேன் என்னை பட்டதென்று அணுகினான் என்க. யாண்டையார் - எவ்விடத்தார், ஈண்டையேன் - இவ்விடத்தேன். | (536) | | இதுவுமது | 1667. | மலைமுக மதநல் யானை மற்றது மறித்து நங்கை முலைமுக நெருங்கப் புல்லி முருகுவேய் கோதை சூட்டிக் கலைமுகந் திருத்திக் காதிற் கனபொன்செய் சுருளை நீவி இலைமுகங் கலந்த செம்பொற் கலங்களை யிலங்க வைத்தான். | (இ - ள்.) மலைமுக மத நல்யானை மற்று அது மறித்து - மலைபோன்றதும், முகத்திலே மதம்பொழிவதும் நல்லிலக்கணம் அமைந்தது மாகிய அவ்வியானையைத் தடுத்து, நங்கை - சுயம்பிரபையின், முலைமுகம் நெருங்கப் புல்லி - முலைகளின் முகடுகள் தன் மார்பிலே அழுந்தும்படி தழீஇ, முருகுவேய் கோதை சூட்டி - அச்சத்தாலே குலைந்துள்ள மணம் பொருந்திய மாலையைக் குழலிலே சூட்டி, கலைமுகம் திருத்தி - மேகலை அணியினைச் செவ்விதிற் றிருத்தி, காதில் - செவியினிடத்தே, கனபொன் செய்சுருளை நீவி - கனவிய பொன்னாலாய குதம்பையைத் தடவி, இலைமுகம் கலந்த செம்பொன் கலங்களை இலங்க வைத்தான் - இலைவடிவிற்றாய் இயற்றிய மூட்டுவாயையுடைய செவ்விய பொன்னாலாய ஏனைய அணிகலன்களையும் திருத்தித் திகழும்படி செய்தான், (எ - று.) அணுகிய நம்பி முலைமுக நெருங்கப் புல்லிச் சூட்டித் திருத்தி நீவி இலங்க வைத்தான் என்க. | (537) | | ஞாயிறு உச்சியை அடைதல் | 1668. | மங்கையர் தம்மை யெல்லா மணிவண்ணன் மருட்டி மற்றிக் கொங்கவிழ் குளிர்கொள் சோலைக் 1குன்றினின் றிழிந்த போது | |
| (பாடம்) 1 குன்றினினிழிந்த போழ்தின். | | |
|
|