பக்கம் : 1036
 

     கணம் - வட்டம்.

     ஞாயிறு உச்சியினை எய்தியகாலைத் தேவியரோடே புனல் விளையாடலை விரும்பி
நம்பி நீர் வாவியைச் சார்ந்தான் என்க.

(539)

 

பல்வேறு வகை வாவிகள்

1670. சாந்துநீர் நிறைந்த வாவி
     1தயங்குசெங் குவளை வாவி
பூந்துக ளவிழ்ந்த பொற்றா
     மரைமலர் புதைந்த வாவி
தேந்துண ரகன்ற தெண்ணீர்த்
     திருமணி யுருவ வாவி
2வாய்ந்தன காட்டிக் காட்டி
     யுழையவர் வணங்கி நின்றார்.
 
     (இ - ள்.) சாந்துநீர் நிறைந்த வாவி - சந்தனங்கலந்த மணநீர் நிறைந்த
குளங்களையும், தயங்கு செங்குவளை வாவி - விளங்குகின்ற செங்கழுநீர் மலர்ந்துள்ள
நன்னீர்க் குளங்களையும், பூந்துகள் அவிழ்ந்த பொன் தாமரைமலர் புதைந்த வாவி -
மகரந்தப் பொடியை மிக்குதிர்க்கும் பொன்னிறத் தாமரை மலர்ந்து நீரை மறைத்துள்ள
குளங்களையும், தேந்துணர் அகன்ற தெண்ணீர் திருமணி உருவ வாவி - இனிய மலர்
யாதும் இல்லாதனவாய் நீலமணிபோன்ற நிறமுடைய தெளிந்த நீர் மாத்திரையே நிறைந்த
குளங்களையும், வாய்ந்தன - ஆண்டுள்ளவற்றை, காட்டிக் காட்டி - அரசன் முதலியோர்க்கு
ஒவ்வொன்றாய்க் காட்டுவாராகி, உழையவர் - பணியாளர், வணங்கி நின்றார் -
அவர்களைத் தொழுது நின்றனர், (எ - று.)

     வாவிக் கரையை அடைந்த நம்பிக்கு நீர்நிறைந்த வாவியையும், குவளை வாவியையும்,
பொற்றாமரை வாவிவையும், தெண்ணீர் வாவியையும், உழையர் காட்டிக் காட்டி வணங்கி
நின்றார் என்க.

(540)

 
1671. அன்னவா 3றமைந்த தெண்ணீ
     ரலைபுன லாடும் போழ்தில்
இன்னவா றியற்று கென்றாங்
     குழையரை மறைய வேவிப்
பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
     புணர்முலை மகளிரோடு
மன்னவாம் வயிரத் தோளான்
     வலஞ்சுழி வாவி புக்கான்.
 
 

     (பாடம்) 1 தங்குசெங். சந்தனங் கலந்தவாவி. 2 வாய்ந்தவை போல.3 றமைத்த