பக்கம் : 1043 | | 1682. | அடித்தலத் தலத்தகங் 1குழுமிக் குங்குமப் பொடிக்கலந் 2தந்திவான் படைத்த பூம்புனல் வடிக்கலந் திலங்குவா ணெடுங்கண் 3மைக்குழாம் பிடிக்கலந் திருளுமங் கியற்றப் பட்டதே. | (இ - ள்.) அடித்தலத்து அலத்தகம் குழுமி - அம்மகளிருடைய அடிகளிலே ஊட்டப்பட்ட செம்பஞ்சுக் குழம்பு செறிந்தமையாலும், குங்குமப் பொடிக்கலந்து - குங்குமப்பொடிகள் கலந்தமையாலும் சிவந்து, அந்திவான் படைத்த - செக்கர் வானத்தை ஒத்துத் திகழ்ந்த, பூம்புனல் - அவ்வழகிய நீர், வடிக் கலந்து இலங்குவாள் நெடுங்கண் - கூர்மை பொருந்தித் திகழ்கின்ற வாள் போன்ற நெடிய கண்களிடத்தே ஊட்டப்பட்ட, இடிமைக் குழம்பு கலந்து - இடித்தியற்றப்பட்ட, கரு மைக்குழம்பு கலந்தமையாலே, அங்கு இருளும் இயற்றப்பட்டது ஏ - அவ்விடத்தே இருளும் உண்டாக்கப்பட்டது, ஏ : அசை, (எ - று.) தேவியர் ஆடிய பூம்புனலிடத்தே அலத்தகமும் குங்குமப்பொடியும் கலந்து செக்கர்வானம் தோன்றிற்று. கண்களினிட்ட மை கலந்து இருளும் பட்டதென்க. | (552) | | | 1683 | .4கொங்கைவாய்க் குங்குமக் குழம்புங் 5கோதைவாய் மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும் செங்கண்மா லகலத்து விரையுந் 6தேர்த்தரோ அங்கண்மா லிரும்புன லளறு பட்டதே. | (இ - ள்.) கொங்கைவாய் குங்குமக் குழம்பும், - கொங்கை களிடத்தே அணியப்பட்ட குங்குமக்குழம்பும், கோதைவாய் - மலர்மாலைகளிடத்தே, மங்கைமார் - மகளிர்களால், சிதர்ந்தன - தூவப்பட்ட, வாசச்சுண்ணமும் - நறுமணப் பொடிகளும், செங்கண்மால் அகலத்து - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டநம்பியின் மார்பிடத்தே அணியப்பட்ட, விரையும் சேர்த்து - மணங்களும் செறிந்து, அம் கண்மால் இரும்புனல் - அழகிய இடத்தின் கண்ணதாகிய கரிய பெருகிய நீர், அளறு பட்டது - சேறாகியது, ஏ : அசை, அரோ : அசை, (எ - று.) தேவியர் கொங்கையிற் பூசிய குங்குமச் சேறும் அவர் சிந்திய வாசச் சுண்ணமும் நம்பியின் மார்பிற் றிமிர்ந்த மணமும் செறிந்து புனல் சேறாகியது என்க. | (553) | |
| (பாடம்) 1 கழுமிக். 2 தந்தியான். 3 மைக்குழாம். 4 கொங்குவாய். 5 கோதைமார். 6 தொத்தாரோ. | | |
|
|