பக்கம் : 1044
 
 
1684. அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர்
சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும்
வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய்
அணங்குநீர்த் திரையவை 1யணைப்ப வொத்தவே.
 
     (இ - ள்.) அணங்கனார் - தெய்வமகளிரை ஒத்த அத்தேவியரின், அகல் அல்குல்
அலைத்தும் - அகலிதாய அல்குலிடத்தே மோதியும், ஆங்கு அவர் சுணங்கு சூழ்
இளமுலை துளும்பத் தாக்கியும் - அவ்விடத்தே அம்மகளிருடைய தேமல்படர்ந்த
இளமையுடைய முலைகள் அசையும்படி புடைத்தும், வணங்கு பூங்கொடியிடை வளைத்தும் -
நுடங்குகின்ற பூங்கொடிபோன்ற நுண்ணிடையை வளைத்துத் தழீஇயும், வாவிவாய் அணங்கு
நீர்த்திரை - அவ்வாவியில் உள்ள அழகிய நீரின் அலைகள், அணைப்ப ஒத்தவே-
அம்மகளிரொடு கலவி செய்வனவும் போன்றன, (எ- று.)

     நீர்த்திரைகள் அம்மகளிரின் அல்குலினை அலைத்தும், கொங்கை யிடத்தே அசைய
மோதியும், கொடியிடைகளை வளைத்தும் கலவிசெய்யும் கணவரை ஒத்தனவென்க.

(554)

 
1685. வடந்தவ ழிளமுலை விம்ம மங்கையர்
குடைந்திட வெழுந்தநீர் குளித்த தாமரை
மடந்தையர் குளித்தெழும் போழ்தின் வாண்முகம்
அடைந்ததோர் பொலிவினை யறிவித் திட்டவே.
 
     (இ - ள்.) வடம்தவழ் இளமுலை விம்ம - மணிவடங்கள் தவழ்கின்ற தம்
இளமையுடைய முலைகள் விம்மும்படி, மங்கையர் - அம்மகளிர்கள், குடைந்திட -
நீராடுதலாலே, எழுந்தநீர் குளித்த தாமரை - அலையாக எழுந்த நீரிலே மூழ்கி
மீளத்தோன்றிய செந்தாமரை மலர்கள், மடந்தையர் குளித்து எழும் போழ்தின் -
அம்மகளிர்கள் நீரிலே முழுகி யெழுகின்ற செவ்வியிலே, வாள்முகம் அடைந்தது ஓர்
பொலிவினை - அவருடைய ஒளியுடைய முகங்கள் பெற்றிருந்த ஒப்பற்ற அழகை, அறிவித்
திட்ட - (உவமை வாயிலாய்ப்) பிறர்க்கறியச் செய்தன, (எ - று.)

     மகளிர்கள் ஆடுதலாலே எழுந்த அலைகளிலே மூழ்கி, மீண்டும் தோன்றும்
தாமரைமலர்கள், நீரில் மூழ்கி எழும் அம்மகளிரின் முகத்தைப் போன்று தோன்றின என்க.

(555)

 
1686. வளைத்தகை யொண்பணைத் தோளி மாரொடு
திளைத்தகங் கழுமிய தரங்கத் தெண்புனல்
 

     (பாடம்) 1 யிணைப்ப.