பக்கம் : 1046 | | பகற்கோயில் - பகற்பொழுதிலே பயிலுதற்குரிய, மாளிகை. நம்பி தேவியரோடே புனல் விளையாட்டயரும் பொழுது பணிமகளிர் வந்து தொழுது நாழிகை அறிவிப்ப, கொடியனார் குழப் பகற்கோயில் எய்தினான் என்க. | (557) | | மகளிர்கள் ஒப்பனை செய்தல் | 1688. | தேவியர் திருமணி மேனி நீர்துடைத் தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக் காவியங் கண்ணினார் காக துண்டத்தின் ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார். | இதுமுதல், 6 செய்யுள்கள் ஒரு தொடர். (இ - ள்.) தேவியர் - நம்பியின் மனைவிமார்கள், திருமணி மேனிநீர் துடைத்து - அழகிய மணிநிறமுடைய தம்மேனியின் ஈரத்தைத் துடைத்து, ஆவி அம் துகில் - பாலாவிபோன்று மெல்லிய அழகுடைய ஆடையை, அல்குல்மேல் உடீஇ - தம் இடையிலே உடுத்திக்கொண்டு, காவி அம் கண்ணினார் - குவளை மலர்போன்ற அழகிய கண்ணையுடைய அம்மகளிர்கள், காக துண்டத்தின் ஆவியால் - அகிற்புகையாலே, ஈர்ங்குழல் - ஈரமுடைய தம் அளகக் கற்றையை, ஆவி ஊட்டினார் - மணமூட்டி உலர்த்தினர், (எ - று.) நம்பியோடே பகற்கோயிலின்கட் சென்ற தேவியர் நீர்துடைத்து, ஆவியந் துகிலுடுத்து அகிற்புகையாலே ஈர்ங்குழல் ஆவியூட்டினர், என்க. | (558) | | 1689. | தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின் கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் 1சார்த்திய 2ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே. | (இ - ள்.) தண் நிறத் தண்கழுநீரின் - தண்மையோடே நன்னிறமமைந்த செங்கழுநீர் மலரோடே, நெய்தலின் - நெய்தலினது, கள்நிறக் கருங்கடையிதழும் - கள்போன்ற நிறமுடைய கரிய கடைப்பகுதியுடைய மலரையும், பெய்து - சேரக்கட்டி, இடை - இடை இடையே, தண் நறும் தமனகக் கொழுந்தும் சார்த்தி - குளிர்ந்த நறுமணமுடைய மருக்கொழுந்தினையும் வைத்துப் புனைந்த, ஒண்நிறப் பிணையல் - ஒளிமிக்க நிறமுடைய மாலையே, அன்று உவக்கப்பட்டது - அற்றை நாள் அத்தேவியரால் பெரிதும் விரும்பி அணியப்பட்டது, (எ - று.) | |
| (பாடம்) 1 சுண்ணமும். 2 பொன்னிறப். | | |
|
|