பக்கம் : 1047 | | தமனகக் கொழுந்து - மருக்கொழுந்து. செங்கழுநீர் மலரோடே நெய்தல் மலரையும் பெய்து, இடையிடையே மருக்கொழுந்தும் சார்த்திப் புனைந்த மலர்மாலையே, அற்றை நாள் தேவியராலே பெரிதும் விரும்பி அணியப்பட்டது என்க. | (559) | | 1690. | பொன்மலைக் காவியிற் றிமிர்ந்து பூங்கமழ் தென்மலைச் சந்தனஞ் 1செறிந்து தாமரை நன்மலர்த் தாதுமீ தப்பி நங்கைமார் மென்முலைத் தடங்களும் 2விருந்து பட்டவே. | (இ - ள்.) பொன்மலைக் காவியில் திமிர்ந்து - மேருமலையிலே உண்டாகின்ற காவியாலாகிய குழம்பினைப் பூசப்பெற்று, பூங்கமழ் தென்மலை சந்தனம் செறிந்து - அழகிதாய் மிக்குக் கமழ்கின்ற பொதியிலில் உண்டாய சந்தனக் குழம்பையும் நீவி, தாமரை நன்மலர் தாதுமீது அப்பி - பொற்றாமரையாகிய நல்ல மலரிலே தோன்றிய பொன்னிறப் பூந்துகளையும் அப்பி, நங்கைமார் - அத்தேவியருடைய, மென்முலைத் தடங்களும் - மெல்லிய முலைகளும், விருந்து பட்டவே - அற்றைநாள் புதுமையுற்றுப் பொலிந்தன, (எ - று.) தேவியரின் கொங்கைகள் அற்றைநாள் மேருமலையிற் றோன்றும் காவி பூசப்பெற்றும் பொதியிலிற் றோன்றிய சந்தனம் நீவப் பெற்றும் பொற்றாமரைப் பூந்துகள் அப்பப் பெற்றும் புதுமையுடையவாய்ப் பொலிவுற்றன என்க. | (560) | | 1691. | கண்ணகங் குளிர்ப்பக்கல் லாரக் கற்றையும் தண்ணறு 3ங் குவளைதா மெறித்த தாமமும் ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார். | (இ - ள்.) இளையர் - இளமைப்பருவம் உடைய தேவிமார், கண் அகம் குளிர்ப்ப - நம்பியின் கட்பொறி இன்புறுமாறு, கல்லாரக்கற்றையும் - நீர்க்குளிரியாலாய பூங்கற்றைகளையும், தண்நறும் குவளைதாம் எறித்த தாமமும் - குளிர்ந்த நறுமணங்கமழும் செங்கழுநீர் மலராலாய ஒளிமிக்க மாலைகளையும், ஒண்ணிறத் தாமரை ஒலியலும் - ஒள்ளிய நிறமமைந்த தாமரை மலராலியன்ற தொடையல்களையும், தழீஇ - அணிந்துகொண்டு, எண்ணரும் பெருங்கவின் எய்தினார் - நினைத்தற்கும் அரிய பேரழகுடையர் ஆயினார், (எ - று.) கல்லாரம் - நீர்க்குளிரி என்னும் ஒரு நீர்ப்பூ, (பிங்கல, 303) அஃது இக்காலத்தே துளிரி என்ற வழங்கப்படுகின்றது. | |
| (பாடம்) 1 மெழுகித். 2 விரிந்து. 3 ந்தாமரைத்தனிரு மேலசைந் | | |
|
|