பக்கம் : 1060 | | சுயம்பிரபை வயிறு வாய்த்தல் | வேறு | 1710. | குலம்புரி சிறுவனைத் தரித்துக் கோலமா 1நிலம்புரி நிழலொளி 2நிரந்து தோன்றலால் வலம்புரி மணிக்கரு விருந்த தன்னதோர் நலம்புரி திருவின ணங்கை யாயினாள். | (இ - ள்.) குலம்புரி சிறுவனை - தன் குலத்தை விளக்கும் மகவினை, தரித்து - தன் வயிற்றிலே தாங்கி, கோலமா நிலம்புரி நிழல் ஒளி - அழகிய பெரிய உலகம் விரும்புகின்ற தண்ணிய ஒளியை, நிரந்து - பரப்பி, தோன்றலால் - காணப்படுதலாலே, நங்கை - சுயம்பிரபை, வலம்புரி - வலம்புரி என்னும் சிறந்த சங்கு, மணிக்கரு இருந்தது - முத்தாகிய கருவைத் தன் வயிற்றிலே கொண்டிருந்தது, அன்னதோர் - போன்றதொரு, நலம்புரி திருவினள் ஆயினாள்-நன்மை மிக்க செல்வம் வாய்த்தவளாயினள், (எ - று.) நன்கலம் நன்மக்கட் பேறு என்பவாகலின், “நலம்புரி திரு“ என்றனர். சுயம்பிரபை கருக்கொண்டுள்ள அறிகுறி திருமேனியிலே விளங்க வலம்புரிச் சங்கு முத்தைக் கருக்கொண்டு திகழுமாப் போலே திகழ்ந்தாள், என்க. | (580) | | சுயம்பிரபையின் திருமேனியின் பொலிவு | 1711. | மின்னிலங் கவிரொளி மேனி மெல்லவே தொன்னலம் பெயர்ந்துபொன் சுடர்ந்து தோன்றலான் மன்னிலங் கருமணி வளர வாளுமிழ் பொன்னிலம் 3புரைவதோர் பொலிவு மெய்தினாள். | (இ - ள்.) மின் இலங்கு அவிர் ஒளி மேனி - மின்னல் போன்று விளங்கிப் பரவாநின்ற ஒளியையுடைய தேவியின் திருமேனி, மெல்லவே - பையப்பைய, தொல் நலம் பெயர்ந்து - பழையவண்ணம் மாறுபட்டு, பொன் சுடர்ந்து - பொன்நிறம் பாய்ந்து, தோன்றலால் - திகழ்தலாலே, மன் இலங்கு - நிலை பேறுடைத்தாய்த் திகழாநின்ற, அருமணி வளர - அரிய மாணிக்கமணி தன் அகட்டிலே தோன்றி முதிராநிற்ப, வாள் உமிழ் - புதிய ஒளியைப் பரப்புகின்ற, பொன்னிலம் புரைவது ஓர் - அழகிய நிலத்தைப் போல்வதொரு, பொலிவும் எய்தினாள்-புத்தெழிலையும் படைத்தாள், (எ - று.) | |
| (பாடம்) 1 நலம்புரி. 2 பரந்து. 3 புரிவதோர். | | |
|
|