பக்கம் : 1061 | | தன்னகாட்டிலே மணிகள் உருப்பெற்று வளரப்பெற்ற நிலம், இரவில் ஒளிவட்டமுடையதாய்க் காணப்படும் என்று கூறுப வாகலின், இவ்வா றோதினார். தேவி தன் அகட்டிலே கருவளருந்தோறும் பொன்னொளி மிக்குத் திகழ்பவள்,தன் அகட்டிலே மாணிக்கமணி உருப்பெற்று வளருந்தோறும் ஒளிமிகும் பொன் நிலத்தை ஒத்தாள் என்க. | (581) | | சுயம்பிரபை கருவுயிர்த்தல் | 1712. | கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத் தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன் கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய நாணலம் பொலிதர நம்பி தோன்றினான். | (இ - ள்.) கோள் நலம் பொலிந்து - ஞாயிறே முதலிய கோள்கள் நன்னிலையிலே நின்று விளங்கவும், விண் குளிர - வானவர் மகிழவும், கிளரும் சோதி அம் நாள் நலம் பொலிதர - திகழாநின்ற சோதி என்னும் அழகிய விண்மீனுக்குரிய நன்மை சிறப்புற் றமையா நிற்பவும், குங்குமத்தோள் நலம் பொலிந்தது ஓர் - குங்குமச் சாந்தணிந்த தோளினது நன்மையாகிய பேராற்றலாலே திகழ்வதொரு, தோன்றலோடு - திவிட்ட நம்பியோடு, தன் கேள் நலம் பொலிதர - தன்னுடைய பிற கேளிர்களும் நன்மையாலே விளங்கா நிற்பவும், நம்பி தோன்றினான் - மகன் பிறந்தனன், (எ - று.) ஞாயிறே முதலிய கோள்கள் தாம் நிற்கும் இடங்களால் நன்மை மிகுவனவாக விண்குளிரச் சோதி மீனுக்குரிய நாளிலே, திவிட்டனோடு தன் சுற்றத்தாரும் நன்மையடையும்படி நம்பி தோன்றினான் என்க. நம்பி ஈண்டு ஆண்மகவு என்னு மாத்திரையாய் நின்றது. | (582) | | அப்பொழுது நிகழ்ந்த ஆரவாரம் | 1713. | பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர் கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர் பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே. | (இ - ள்.) ஊழி கலிகெழு கனை நீர் கடல் - இறுதிக்காலத்தே முழக்க மிக்கு ஆரவாரிக்கின்ற நீர் மிக்க கடல், கலங்கியன்னதோர் - பொங்கிக் கலங்கினாற் போன்றதொரு, பலிகெழு முரசொலி - வழிபாடு கொள்கின்ற மங்கல முரசங்களின் பேரொலி, பொலிகெனும் ஒலிகளும் - “நம்பி நீடூழி வாழ்க“ என்னும் வாழ்த்தொலியும், பொன் செய் மாமணி ஒலிகல வொலிகளும் - பொன்னாலியன்ற சிறந்த மணிகள் அழுத்தப்பெற்ற ஒலிக்கும் மரபினையுடைய நூபுரம் முதலிய அணிகலன்களின் ஒலியும், விரவி - கலந்து, பரந்து - நகர் முழுதும் பரவா நின்று, ஒலித்ததே - முழங்கிற்று, ஏ : அசை, (எ - று.) | |
| | | |
|
|