பக்கம் : 1063 | | (இ - ள்.) தொத்து இளம் கடிமலர் துதைந்த கோதையார் - கொத்தாகிய இளமையுடைய மணமிக்க மலர்கள் செறிந்த மாலையை அணிந்த விறலியர், இளங்குமரரோடு - இளமையுடைய கூத்தரோடே, மொய்த்து - நெருங்கி, ஆடும் முன்கடை - கூத்தாடாநின்ற தலைவாயிலின் கண், மத்தளப்பாணியும் - முழவினது இன்னிசையும், மதன கீதமும் - காமச்சுவை கவினிய இயைப் பாடலும், கைத்தலத் தாளமும் - கைகளாலே ஒற்றும் தாள ஓசையும், கலந்து இசைத்தவே - கூடி முழங்கின, (எ - று.) நம்பி பிறந்தமை கருதி மகிழ்ந்த நகரத்தே விறலியரும் கூத்தரும் ஆடுதலாலே மத்தள முழக்கமும் காமப்பாடலும் கைத்தலத்தாளமும் கலந்து இசைத்த என்க. | (585) | | இதுவுமது | 1716. | சிறைநகர் சீத்தன திலத முக்குடை இறைநகர் விழவணி யியன்ற 1நீண்டு நீர்த் துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே. | (இ - ள்.) நகர்சிறை சீத்தன - அப் போதனநகரத்தே உள்ள சிறைகளிலுள்ள குற்றவாளிகள் வீடு செய்யப்பட்டனர், திலதம் முக்குடை இறைநகர் - மேன்மை மிக்க மூன்று குடைகள் நிழற்றா நின்ற அருகக் கடவுளின் திருக்கோயில்களிலே, விழவணி இயன்ற - விழாக்களாகிய அழகிய செயல்கள் நிகழ்த்தப்பட்டன, நீண்டு நீர்த்துறை நகர் - நீண்ட நீர்த்துறைகளி டத்துள்ள மண்டபங்களிலே, சுண்ணம் நெய்நாவி தூங்கின - மணப்பொடியும் நறு நெய்யும் கத்தூரியும் மிக்கு வழங்கப்பட்டும் எஞ்சிக்கிடந்தன, நிறை நகரவர் தொழில் - இம்மகப்பேற்றாலே மகிழ்ச்சியுற்ற அச்செல்வம் நிறைந்த போதன நகரத்தே வாழும் மாந்தர்கள் செய்யும் அறச்செயல், நினைப்பு இகந்த - நினைந்து கூறுதற்கியலாது மிக்கன, ஏ : அசை, (எ - று.) நீண்டு - நீண்ட. சிறை : ஆகுபெயர், நீர்த்துறைநகர் - நீர்த்துறைக் கண்ணுள்ள மண்டபம். அப்பொழுது சிறைப்பட்டோர் வீடு செய்யப்பட்டனர்; கோயில்களிலே விழா நிகழ்த்தப்பட்டன; நீர்த்துறைகளிலே எண்ணெயும் சுண்ணமும் வழங்கி எஞ்சின; அந்நகரத்தார் செய்த அறச்செயல்கள் அளவிறந்தவாயின என்க. | (586) | |
| (பாடம்) 1 தீண்டு. | | |
|
|