பக்கம் : 1064 | | அம்மகவிற்கு வாலாமை கழித்து இறைவன் திருவடிச் சேடம் புனைதல் | 1717. | சுண்ணநெய் யெழுபக லாடித் தொன்னகர் நண்ணிய நானநீ ராடி நம்பியைப் புண்ணியா 1வாசனஞ் செய்து புங்கவன் திண்ணிய வடிமலர்ச் சேடஞ் சேர்த்தினார். | (இ - ள்.) தொல்நகர் - பழைதாகிய அப்போதனமா நகரத்தே, எழுபகல் - நம்பி பிறந்தநாள் தொடங்கி ஏழுநாளளவும், சுண்ணம் நெய் ஆடி - சுண்ணம் நெய் ஆடுதலாகிய சடங்கினை இயற்றி, நண்ணிய நானநீர் ஆடி - எழுநாளின் பின் பொருந்திய நீராட்டம் செய்து, நம்பியை - அம்மகவினை, புண்ணியா வாசனம் செய்து - வாலாமை போக்கி, புங்கவன் - அருக பரமேட்டியின், திண்ணிய அடிமலர்ச் சேடம் சேர்த்தினார் - அழிவற்ற திருவடிச்சேடத்தையும் சூட்டினார், (எ - று.) புண்ணியாக வாசனம் - புண்ணியா வாசனம் என நின்றது, அது :- வாலாமை போக்குதல் என்னும் பொருட்டு. சேடம் - நிர்மாலியம். நம்பி பிறந்தநாள் தொடங்கி ஏழுநாள் காறும் சுண்ணம் நெய் ஆடிப் பின்னர் நீராடி வாலாமை போக்கி நம்பிக்குப் புங்கவன் திருவடிச் சேடம் சேர்த்தினார் என்க. | (587) | | சுற்றத்தார் சூழ்தல் | 1718. | வழுவலி னாஞ்சிலான் வண்பொ னாழியான் தழுமல ரலங்கலான் றாதை தானெனச் செழுமல ரணிகுழற் றேவி மாரென எழுபெருங் கிளைகளு மினிதி னீண்டினார். | (இ - ள்.) வழுவல் இல் நாஞ்சிலான் - தவறுதலில்லாத கலப்பைப் படையுடைய விசயனும், வண்பொன் ஆழியான் - வளப்பமுடைய அழகிய ஆழிப்படையுடைய திவிட்ட நம்பியும், தழுமலர் அலங்கலான் தாதைதான் என - தழுவிய மலர்மாலை அணிந்த அத்திவிட்ட நம்பியின் தாதையாகிய பயாபதியும், என்றித்தொடக்கத்து ஆடவரும், செழுமலர் அணிகுழல் தேவிமார் என - செழித்த மலர் மாலையாலே அழகுறுத்தப்பட்ட கூந்தலையுடைய மகளிர்களாகிய மிகாபதி முதலிய தேவியர்களும் என்று கூறப்பட்ட இருபாற்பட்ட, எழுபெருங் கிளைகளும் - அன்பு மிக்கு எழாநின்ற கேளிர்கள் அனைவரும், இனிதின் ஈண்டினார் - இன்புடையராய் வந்து எய்தினார், (எ - று.) | |
| (பாடம்) 1 வாசனை. | | |
|
|