பக்கம் : 1066 | | பொலிவுரை - வாழ்த்துரை; பொலிக என்னும் வாழ்த்துரை என்றவாறு. அறவோராகிய அந்தணரும் மறமிக்க மன்னரும் பிறசான்றோரும் வந்து அக்குழவியை ஏந்தினராய் வாழ்த்தும் ஒலிமிக்க தென்க. | (590) | | அம்மகப்பேற்றைக் குறித்து நிதி வழங்குதல் | 1721. | 1குருமணிக் கோவையுங் குளிர்பொற் குன்றமும் அருமணிக் கலங்களு மரத்த வாடையும் புரிமணி வளநகர் புகுந்து கொள்கெனக் கருமணி யொளியவன் கவரக் காட்டினான். | (இ - ள்.) குருமணிக் கோவையும் - நிறமமைந்த மணி வடங்களையும், குளிர்பொன் குன்றமும் - மனங்குளிர்விக்கும் பொன்குவியலாகிய மலைகளையும், அருமணிக்கலங்களும் - பெறற் கரிய மணிகள் அழுத்தப்பெற்ற அணிகலன்களையும், அரத்த ஆடையும் - செம்பட்டாடை களையும், புரிமணி வளநகர் புகுந்து கொள்க என - விரும்பத்தகுந்த அழகிய வளப்பமிக்க நம் அரண்மனைக் கருவூலத்தே புகுந்து, வேண்டிய வற்றை அள்ளிக் கொள்ளக்கடவீர் என்று அருளி, கருமணி ஒளியவன் - மரகத மணி வண்ணனாகிய திவிட்டநம்பி, கவர - இரவலர் தாமே புக்கு வேண்டியவற்றைக் கொள்ளுமாறு, காட்டினான் - கருவூலத்தைத் திறந்து யாவர்க்கும் காட்டா நின்றான், (எ - று.) திவிட்டநம்பி கருவூலத்தைத் திறந்து கோவையும் பொன்குன்றமும் கலங்களும் ஆடையும் இரவலர் தாமே புக்கு வாரிக்கொள்க என அவர்க்குக் காட்டினன்; என்க. இது திவிட்டநம்பியின் மகிழ்ச்சி மிகுதி கூறிற்று. | (591) | | அம் மகவினுக்கு “விசயன்“ எனப் பெயர் சூட்டல் | 1722. | திருவொடு திசைமுகந் தெளிர்ப்பத் தோன்றினான் திருவொடு வென்றியிற் சேரு மாதலால் திருவொடு 2திகழ்தர விசய னென்றரோ திருவுடை மார்பனை நாமஞ் சேர்த்தினார். | (இ - ள்.) திருவொடு திசைமுகம் தெளிர்ப்ப - செல்வத்தோடே எட்டுத் திசைகளும் செழிப்புற்றுத் திகழும்படி, தோன்றினான் - தோன்றியவனாகிய நம்பி, திருவொடு - திருமகளோடே, வென்றியில் - வெற்றி மகளையும், சேரும் ஆதலால் - எய்துவன் ஆதலாலே, திருவொடு திகழ்தர - அவ்வெற்றியாகிய நன்மையோடே விளங்கும்படி, விசயன் என்று - “விசயன்“ என்னும், நாமம் - திருப்பெயரை, திருவுடைமார்பனை சேர்த்தினார் - திருமகள் வதியும் மார்பையுடைய அம்மகனுக்கு வழங்கலாயினார், (எ - று.) | |
| (பாடம்) 1 கூர்வையும். 2பெயரிய. | | |
|
|