எட்டுத் திசைகளும் திருவோடே திகழுமாறு தோன்றிய அம்மகவு திருமகளோடே வெற்றிமகளையும் சேருவான் என அறிஞர் கூறலின், அதற்கு விசயன் என்னும் திருப்பெயரை வழங்கினார் என்க. விசயன் - வெற்றியுடையோன். வென்றியைச் சேருமாகலின் விசயன் என்றனர் என்றபடி. |
(592) |
|
விச்சாதரர் உலகினின்றும் ஒரு விமானம் வருதல் |
1723. | விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென் றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே. |
(இ - ள்.) விஞ்சையர் உலகிற்கும் விடுத்தும் ஓகை என்று - விச்சாதரர் உலகினராகிய சடிமன்னன் முதலியோருக்கும் இவ்வுவகைச் செய்தியைத் தூதுவராலே அறிவிப்பாம் என்று, அஞ்சனவண்ணன் - திவிட்டநம்பி, அங்கு அருளும் ஆயிடை - அவ்விடத்தே நினைத்தருளிய பொழுதே, மஞ்சுடை விசும்பினின்று - முகில்களையுடைய வானத்தினின்றும், செஞ்சுடர் உமிழ்வது ஓர் செம்பொன் மானம் - செவ்விய ஒளியைப் பரப்புவதாகிய ஒரு செவ்விய பொன்னாலியன்ற விமானம், இழிந்து வந்தது - இறங்கி நகரத்தை எய்தியது, (எ - று.) ஓகை உவகை என்பதன் மருஉ, ஓகைக்குக் காணரமான செய்தியை ஓகை யென்றார். சடி முதலியவர்க்கு இச்செய்தியை அறிவிப்பேம் என்று நம்பி கருதுமளவிலே, விசும்பினின்றும் ஒரு விமானம் இறங்கி எய்தியது என்க. |
(593) |
|
1724. | மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம் அணிநக ரணுகின தடிக ளென்றலும் பணிவரைக் 1காணர்மினீர் பாங்கி னென்றனன் துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான். |
(இ - ள்.) மணிநகு விமானம் ஒன்று - மணிகளாலே விளங்குகின்ற ஒரு விமானம், இழிந்து வந்து நம் அணி நகர் அணுகினது அடிகள் என்றலும் - வானத்தினின்றும் இறங்கி நமது நகரத்தை வந்து எய்தியது பெருமானே என்று காவலர்கள் உரைத்தவுடனே, துணிநகு சுடர்ஒளி துளும்பும் வேலினான் - தெளிவுடனே விளங்குகின்ற சுடரும் ஒளியாலே |
|
|
(பாடம்) 1 யறிந்துநீர் கொணர்மின். |