பாக்கு மரங்கள் |
132. | வேய்நி ழன்னி லாவிலங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப் பாய்நி ழற்ப சுங்கதிர்ப் 1ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச் சேய்நி ழற்செ ழும்பொனாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப் போய்நி ழற்பொ லிந்துவீழ்வ போன்ற பூக ராசியே. |
(இ - ள்.) பூகராசி - கமுகமரக் கூட்டம்; வேய் - அழகிதாகச் செய்கின்ற; நிழல் - ஒளியினால்; நிலா இலங்கு - திங்களொளி போல் விளங்குகின்ற; வெள்ளி - வெள்ளிய; விம்மு பாளைவாய் - பருத்த பாளையினிடத்தே; பாய்நிழல் - பரவுகின்ற ஒளியைச் செய்கின்ற; பசுங்கதிர் - பசிய நிறமான ஒளியையுடைய; பரூஉ மணி - பெரிய மணிகளைப்போன்ற; குலைகுலாய் - குலைகள் விளங்கப்பெற்று; சேய்நிழல் - நெடுந்தொலையளவும் ஒளி வீசுகின்ற; செழும்பொனால் - உயர்ந்த பொன்னினால்; திரண்ட செம்பழத்தவாய் - திரண்டமைந்த சிவந்த பழங்களையுடையனவாய்; நிழல் போய் பொலிந்து வீழ்வ போன்ற - நிழல் நெடுந்தொலை சென்று பொருந்திப் பொலிதலானே கீழேவீழ்வன போலுள்ளன. (எ - று.) பூகராசி. வெள்ளிநிறமுடைய பாளையிலே பச்சை மணி போன்ற காய்களையுடைய குலைபொருந்திச் செம்பொன் மயமான பழங்களையுடையன; அவற்றின்நிழல் நெடுந்தொலையளவும் தரையிற் படிந்திருத்தல் அம்மரங்கள் சாய்ந்து கிடந்தாற்போல் உள்ளதென்பது ஈற்றடியின் கருத்து. நிழன்னிலா - னகரமெய் விரித்தல் விகாரம். பாளைவாய். வாய் - ஏழனுருபு. |
( 14 ) |
மாடங்களும் மரங்களும் |
133. | காந்தி நின்ற கற்பகந்நி ழற்க லந்து கையறப் 2பாய்ந்தெ ரிந்த போல்விரிந்து பாரி சாத மேர்செய வாய்ந்தெ ரிந்த செம்பொன்மாட வாயி லாறு கண்கொளப் போந்தெ ரிந்த 3போன்மரம்பு றம்பொ லிந்தி லங்குமே. |
(இ - ள்.) காந்தி நின்ற - ஒளியானது நிலைபெற்று நின்ற; கற்பக நிழல் கற்பக மரங்களின் நிழலிலே; பாரிசாதம் கலந்து - பாரிசாத மரங்கள் பொருந்தி; கைஅறப் பாய்ந்து எரிந்த போல் விரிந்து - பார்த்தோர் செயலறும்படி முழுவதும் எரிபட்டாற் போல மலர்ந்து; ஏர்செய - அழகு செய்ய; |
|
(பாடம்) 1 பருமணிக், பரும்மணி. 2. பாய்ந்தெரிந்த. 3. பொன்மரம். |