பக்கம் : 1070 | | இதுமுதல் 9 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) மங்குல்தோய் மணிவரை மன்னன் தன் மகள் - முகில்கள் பொருந்திய அழகிய வடமலையின்கண் உள்ள சுரேந்திரகாந்த நகரத்து அரசனுடைய மகளாகிய, தொங்கல் சூழ் சுரிகுழல் சோதிமாலை - மலர்மாலைகள் சுற்றப்பட்ட சுரிந்த கூந்தலையுடைய சோதிமாலை என்னும் அரசிளஞ் செல்வி, எங்கள் கோன் - எம் அரசனாகிய, எறிகதிர்ப் பெயரன் - அருக்ககீர்த்தி என்னும், பெயரையுடைய கொங்குசேர் அலங்கலான் - மணந் தங்கிய மலர் மாலையையுடையோன், குளிர - மனமகிழும்படி, தங்கினாள் - அவனுடன் உறைந்தாளாக, (எ - று.) எம்மரசனாகிய அருக்ககீர்த்தி சுரேந்திரகாந்தத்து மன்னன் மகளாகிய சோதிமாலை என்பாளாகிய தன் மனைவியோடே மகிழ்ந்துறைந்தானாக என்றபடி. | (598) | | சோதிமாலையின் கனா | 1729. | மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன் தொங்கல்வாய் மடந்தைகண் டுயிலு மாயிடைக் கங்குல்வாய்க் கதிர்மதி கவானின் மேலிருந் தங்கண்மால் விசும்பக மலர்வித் திட்டதே. | (இ - ள்.) மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன் தொங்கல்வாய் மடந்தை - முகில் மிக்க வானிடத்தே அம்மழையினூடே தவழும் மின்னற் கொடிபோன்ற சுரேந்திரகாந்த மன்னனுடைய, மலர்மாலை அணிந்த மகள் ஆகிய சோதிமாலை, கண்டுயிலும் ஆயிடை - மேனிலைமாடத்தே உறங்கியதொரு பொழுதிலே, கங்குல்வாய் - இரவின்கண், கதிர்மதி - நிலாவொளியையுடைய திங்கள் மண்டிலம், கவானின் மேலிருந்து - தனது தொடையிலிருந்து சென்று, அங்கண்மால் விசும்பு அகம் அலர்வித்திட்டது - அழகிய இடம் விரிந்த பெரிய வானிடமெங்கும் விளக்கம் செய்தது, (எ - று.) கவான்: இடக்கரடக்கல். சோதிமாலை கண்டுயிலும்போது தன் தொடையினின்றும் போய் வானிடமெங்கும் ஒருதிங்கள்விளக்கஞ் செய்யக் கனாக் கண்டாள் என்க. | (599) | | சோதிமாலை வயிறு வாய்த்தல் | 1730. | தெண்கதிர்த் திருமணி கனவிற் சேர்ந்தபின் கண்கதிர்த் திளமுலை கால்ப ணைத்தன தண்கதிர்த் தமனியப் பாவை போல்வதோர் ஒண்கதிர்த் திருமக ளுருவ மெய்தினாள். | |
| | | |
|
|