பக்கம் : 1073
 

      (இ - ள்.) வானிடை மணிவிளக்கு எரிந்த - வானிடத்தே மணிகளாகிய விளக்குகள்
ஒளிர்ந்தன, வண்டொடு தேனுடை மலர்மழை சிதர்ந்தது - வண்டுகளோடே தேன் மிக்க
மலர்மாரி பொழிந்தது, அவ்வழி - அப்போது, மீன்உடை விரிதிரை வெண்சங்கு ஆர்த்தன
- மீன்களை உடைய விரிந்த கடலிலே தோன்றிய வெளிய சங்குகள் முழங்கின, தானுடை
ஒளி திசை தவழ்ந்து எழுந்தது - அக்குழவியின் திருமேனி ஒளி திசைகளிலே பரவி
எழுந்தது, (எ - று.)

     அக்குழவி தோன்றிய பொழுது, வானிடத்தே மணிவிளக்கு எரிந்தன; மலர்மழை
பொழிந்தது; சங்குகள் முழங்கின;அக்குழவியின் திருமேனி ஒளி திசைகளிலேபரவிற்றென்க.

(604)
 
அம்மகவிற்கு “அமி்ததேசன்Ó என்று பெயர் சூட்டல்
1735. அளப்பருந் திறலுடை யரசர் தொல்குடை
அளப்பருந் திறலினோ டலரத் தோன்றினான்
அளப்பருந் திறலின னமித தேசனென்
றளப்பருந் திறற்பெய ரமரக் கூறினார்.
 
     (இ - ள்.) அளப்பரும் திறலுடை அரசர் - கணித்தற் கரிய பேராற்றலுடைய தன்
மூதாதையராகிய அரசருடைய, தொல்குடை - பழையதாகிய திங்கள் வெண்குடையின் நீழல்,
அளப்பரும் திறலினோடு - பகைவரால் அளந்தறிய வொண்ணாத பேராற்றலோடே, அலர
- விரியும்படி, தோன்றினான் - பிறந்தானாகலின், அளப்பரும் திறலினன் - அளத்தற்கரிய
பேராற்றலுடைய இந் நம்பி, அமிததேசன் என்று - அமிததேசன் என்று, அளப்பரும் திறல்
பெயர் - அளத்தற்கரிய ஆற்றல் என்னும் பொருளையுடைய பெயரை, அமரக் கூறினார் -
பொருந்தும்படி வழங்கினார்,
(எ - று.)

     அமிதம் - அளவுபடாமை. தேசு - அழகு ஒளி புகழ் அறிவு முதலியவற்றைக்
குறிக்கும் பலபொருள் ஒருசொல். ஈண்டு, தேசு - என்பது, தமிழிலே திறல் என்று
இப்புலவரால் மொழிபெயர்க்கப்படுகின்றது. எனவே அமிததேசன் - என்பதற்கு
அளவிலாத்திறலோன் என்பது பொருளாகலின் ‘அளப்பருந்திறற் பெயர்’ என்றார்,

     தேசு: வடசொல்.

    அளப்பருந் திறலினோடு தோன்றலின் அமிததேசன் என்று பெயரிட்டனர் என்க.

(605)

 
இச்செய்தியை அறிவிக்கவே யான் வந்தேன் எனல்
1736. ஐயன தழகுகண் பருக வவ்வழி
மையணி மழைமுகில் வண்ணன் மாமனார்
வையக முடையவற் குணர்த்தி வாவென
நெய்யொடு வந்தன னிலைமை யின்னதே.